ஹீரோ மகேஷ்பாபு செய்த உதவி: ஒரு மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை!

Published:

mahesh babu
mahesh babu

கிழக்கு கோதாவரி மாவட்டம் அல்லவரம் மண்டலத்திலுள்ள தும்மலபல்லி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், நாகஜோதி தம்பதிகளின் ஒரு மாத ஆண் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்காக பிரபல ஹீரோ மகேஷ்பாபு உதவி செய்து நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஹீரோவாக ஆனார்.

மே மாதம் 31-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா பிறந்த தினத்தையொட்டி விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தார்கள்.

maheshbabu helping
maheshbabu helping

அந்த தம்பதிகளுக்கு இதுவே முதல் பிரசவம். முதலில் ஆரோக்கியமாக தென்பட்டாலும் சில நாட்களிலேயே குழந்தையின் உடல் நலத்தில் மாற்றங்கள் வந்ததை கவனித்து அமலாபுரத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பித்தார்கள். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அரிதான இதய நோயால் அவன் சிரமப்படுகிறான் என்பதை கவனித்து விரைவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பெற்றோருக்கு தெரிவித்தார்கள். மேற்கொண்டு மேலான மருத்துவ சிகிச்சைக்காக விஜயவாடா அல்லது ஹைதராபாத் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும் என்றும் செலவு அதிகமாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
maheshbabu helping
maheshbabu helping

பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய பிரதீப் அமலாபுரத்திலுள்ள தன் நண்பரின் மூலம் ஹீரோ மகேஷ்பாபு டிரஸ்ட் வழியாக குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்று அறிந்துகொண்டு விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனை ஹார்ட் அண்ட் ப்ரைன் இன்ஸ்டிடியூட் மருத்துவர்களை சென்ற மாதம் 30ஆம் தேதி அணுகினார்.

ஆபரேஷனுக்குப் பின் இரண்டு நாட்களுக்கு பிறகு ஜூன் இரண்டாம் தேதி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினார்கள். அறுவை சிகிச்சையின் பிறகு குழந்தையின் உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக ஆனது. பிபி குறைவானதால் இதயம் அடித்துக் கொள்வதில் வேறுபாடு காணப்பட்டதால் மருத்துவர்கள் ஐசியுவில் சிகிச்சை அளித்தார்கள்.

maheshbabu helping
maheshbabu helping

இரண்டு வாரங்களுக்குப் பிறகு குழந்தை ஆரோக்கியம் மேம்பட்டு நல்ல முன்னேற்றம் இருந்ததால் சொந்த கிராமத்திற்கு அனுப்பினார்கள். தற்போது குழந்தை நல்ல உடல் நலம் தேறி வருகிறான் என்று ப்ரதீப் தெரிவித்தார். ஹீரோ மகேஷ்பாபுவுக்கு நன்றி தெரிவித்தார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img