விஜயவாடா ‘புன்னமி காட்’டில் ஷாக்: பரபரப்பை ஏற்படுத்திய பசு மாடுகள் மரணம்!

Published:

vijayawada
vijayawada
  • மழையினாலும் காற்றினாலும் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பிகள். அவற்றை தொட்டு 3 பசுமாடுகள் மரணம்!
  • அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று உள்ளூர் மக்கள் கோபம்.

இன்று காலையில் விஜயவாடா புன்னமி படித்துறையில் மரணமடைந்த பசுக்கள் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாகவே பசுக்கள் மரணமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

பலத்த மழை காற்று காரணமாக மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தன என்றும் அவற்றை யாரும் கவனிக்கவில்லை என்றும் அவற்றை மிதித்ததால் பசுக்கள் மரணம் அடைந்தன என்றும் தெளிவாக கூறினார்கள்.

அதிகாரிகளின் அலட்சிய போக்கே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் ஆத்திரம் அடைந்தார்கள். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

நடந்த சம்பவத்தின் மீது விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img