April 21, 2025, 4:07 PM
34.3 C
Chennai

கோவையில் முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டம்!

edappadi
edappadi

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் 238.40 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய திட்டங்கள் திறப்பு ஆகியவை நடைபெற்றது.

சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 166 கோடி மதப்பீட்டில் பில்லூர் 3 வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் கோவை மாவட்டத்தில் கபசுர குடிநீர் , ஜிங்க் மாத்திரை , வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி பெட்ட்கத்தை பத்து லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் கோவை உக்கடம் பெரிய குளத்தில் 39.74கோடி மதிப்பீடடில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளத்தின் ஒரு பகுதியில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் 25.83 கோடி ரூபாயில் செய்யப்பட்ட பணியிகள் ஆகியவற்றை வீடியோ கான்பிரசிங் முறையில் திறந்து வைத்தார்.

மேலும் 2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அன்னூர் வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை வீடியோ கான்பிரசிங் முறையில் திறந்து வைக்கப்பட்டது.

ALSO READ:  சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!

இதே போல் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,2.70 கோடி மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டப்பட்ட கட்டிடம் ஆகியவையும் வீடியோ கான்பிரசிங் முறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனையடுத்து கோவையில் உள்ள கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, சிஸ்பா உட்பட 15 தொழில் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரொனாவால் ஏற்பட்ட தொழில் நெருக்கடி, மின் கட்டணம் உட்பட தொழில் முனைவோருக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழில் அமைப்பு நிர்வாகிகள் முதல்வரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories