தண்ணீர் குடிக்கும் தண்டனை விதித்த பெற்றோர்! சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

boy drinking water
boy drinking water
  • மூச்சு முட்ட நீர் குடித்து உயிரிழந்த சிறுவன்.
  • பெற்றோர் செய்த கொடுமை.

தண்ணீர் அருந்து என்று பெற்றோர் விதித்த தண்டனை கடைசியில் அந்த சிறுவனின் உயிர் பிரிவதற்கு காரணமானது. சிறு குழந்தைகளை கண்ணுக்கு இமைபோல் காக்க வேண்டிய பெற்றோரே அந்த சிறுவனுக்கு காலனாக, எமனாக மாறினார்கள்.

அத்தனை நீர் தன்னால் அருந்த இயலாது என்று சிறுவன் மன்றாடினாலும் சரி மூச்சு முட்ட, மூக்கைப் பிடிக்க தண்ணீர் குடிக்கும் தண்டனை விதித்து மகனின் இறப்புக்கு காரணமானவர்கள் அவர்கள்.

அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் நடந்துள்ள இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ஜாகரி சபின் என்ற 11 வயது சிறுவன் சில நாட்களாக சிறுநீரக பிரச்சினையால் சிரமப்பட்டு வருகிறான். அவனுடைய சிறுநீர் மிகவும் திக்காக, முற்றிய வண்ணத்தில் மாறியதால் தந்தை ரைன், அனுடைய சித்தி தாரா அவனை தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்கள்.

தாரா ஒருநாள் சபீனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்காக சென்றாள். சபீனின் வாட்டர் பாட்டிலில் இன்னும் நீர் மீதி இருந்ததால் அவனை வினவினாள் தண்ணீர் ஏன் குடிக்கவில்லை என்று கேட்டாள். அதற்கு சபீன் ஆத்திரமடைந்தான். கோபப்பட்டான்.

அதனால் ரைன், தாரா அவனுக்கு தண்ணீர் குடிக்கும் பனிஷ்மென்ட் அளித்தார்கள். தாம் கூறும் வரை வெளியில் வரக்கூடாது என்று கூறினார்கள். அதனால் சபின் சமையலறையில் நின்று சுமார் 4 மணி நேரம் நீர் குடித்துக் கொண்டே இருந்தான்.

parents
parents

அதன் பலனாக அவனுக்கு வாந்தி ஏற்பட்டது. ஆனாலும் சரி அவர்கள் அவனை நிறுத்தவில்லை. சபீன் என்ன செய்கிறான் என்று அவர்கள் சமையல் அறைக்குச் சென்றார்கள். அங்கு கீழே விழுந்து கிடந்த சபீனைத் தூக்கி நிறுத்தினார்கள். ஆனால் சபீன் மீண்டும் விழுந்துவிட்டான். இதனால் தலையில் காயம் ஏற்பட்டது.

ரைன் கூறிய விவரங்களின் படி கீழே விழுந்து எழுந்த பின் சபீன் விந்தையாக ஏதேதோ பேசினான். அதனால் அவன் அதிக தண்ணீர் குடித்து சிரமப் பட்டான் என்று எண்ணி தூங்கும்படி சொன்னோம்.

அதன்பின் காலை படுக்கையின் மீது படுத்திருந்த சபீன் உடலெங்கும் ஜில்லென்று ஆகி உடம்பு விரைத்து இருந்தது. அதனால் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அதற்குள் அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

சபீன் உணவு அருந்தாமல் 4 மணி நேரம் சுமார் 83 லிட்டர் நீர் அருந்தி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கணக்கிட்டார்கள். உடலுக்கு எத்தனை தேவையோ அத்தனை நீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்றும் அதற்கு மீறிய நீர் குடித்தால் உயிருக்கு அபாயம் என்றும் தெரிவித்தார்கள்.

தாம் சபீனுக்கு விதித்த தண்டனை மூலமாகவே சிறுவன் இறந்துவிட்டான் என்று அறிந்த ரைன் தாரா தம்பதிகள் போலீசாரிடம் சரணடைந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories