December 6, 2025, 9:40 AM
26.8 C
Chennai

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா!

vijayawada solar energy
vijayawada solar energy

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்திற்காக ஏற்பாடு செய்யும் சூரிய பலகைகளின் மீது 40 சதவிகிதம் தள்ளுபடி அளிக்க உள்ளது. நகரிலுள்ள வணிக வளாகங்களுக்கும் சூரிய பலகைகள் ஏற்பாடு செய்து கொள்ள சலுகை அளிக்கப் போகிறது.

இது வெற்றிகரமாக நடந்தேறினால் படிப்படியாக மீதி உள்ள நகரங்களுக்கும் விஸ்தரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நகரத்தில் இரண்டு மூன்று கிலோ வாட்கள் பயன்படுத்தும் கனெக்ஷன்கள் அதிகமாக உள்ளன. ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய பலகைகளின் ஏற்பாடுகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதன்படி ரூபாய் 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை செலவு செய்தால் வீட்டுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கிறது. இதில் 40 சதவீதத்தை மத்திய அரசு தள்ளுபடியாக கொடுக்கிறது. அதாவது கிலோ வாட்டுக்கு 16 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கிறது.

solar energy
solar energy

தற்போது வீட்டு பயன்பாட்டாளர்களுக்கு இத்திட்டம் அமுலில் உள்ளது. சூரிய சக்தி நகர ப்ராஜெக்டில் ஒரு பகுதியாக வணிக வளாகங்களுக்கும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. வணிக வளாகங்களுக்கு எத்தனை தள்ளுபடி அளிக்க வேண்டும் என்பது பற்றி இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டி உள்ளது.

பயன்பாட்டாளர்களுக்கு தரமான குறைந்த விலை மின்சாரம் கிடைக்கும்படி ஒரு புதிய திட்டத்தை ஏற்படுத்தி வருவதாக மாநில மின்சாரத்துறை ஞாயிறன்று ஒரு அறிவிப்பில் தெரிவித்தது. இதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் இலக்கு, தேவையான நிதி தொடர்பாக ஒரு திட்டத்தை தயாரித்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories