ஆந்திரத்தில் ஒரு ‘சாத்தான்’குளம் சம்பவம்! மாஸ்க் அணியாத இளைஞர்; போலீஸ் தாக்கி மரணம்!

Published:

ap-youth-beat-died
ap-youth-beat-died

மாஸ்க் அணிய வில்லை என்று கிரண் என்ற இளைஞரை அடித்துக் கொன்ற போலீஸ் அதிகாரி.

சீராலா எஸ்ஐ விஜயகுமார் தாக்கியதால் கிரண் என்ற தலித் இளைஞன் குண்டூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது புதன்கிழமை காலை மரணம் அடைந்தார்.

இந்த மாதம் 18ம் தேதி பைக்கில் மாஸ்க் அணியாமல் சென்று கொண்டிருந்தார் என்று ஆத்திரம் அடைந்த எஸ்ஐ விஜயகுமார் லாட்டியால் கிரண் என்ற இளைஞனை தீவிரமாக அடித்து தாக்கினார். அதனால் மயங்கி விழுந்த இளைஞனை எஸ்ஐ ஊழியர்களோடு சேர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து முழு விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி யை முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரித்தறிந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிரண் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் பரிகாரம் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ap-youth-beat-died1
ap-youth-beat-died1

சீராலாவில் இந்த மாதம் 18ம் தேதி எஸ்ஐ தாக்கியதால் மரணமடைந்த தலித் இளைஞன் கிரண் வழக்கு குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோபம் வெளிப்படுத்தியுள்ளார். மாவட்ட எஸ்பி யிடமிருந்து இந்த சம்பவம் குறித்து விவரங்களை முதல்வர் அலுவலகம் சேகரித்தது. இளைஞனின் மரண வழக்கு மீது உயர் அளவில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இறந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிகாரம் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மீது எஸ்பி சித்தார்த் கௌசல் விவரிக்கையில்… சீராலா இளைஞனை எஸ்ஐ விஜயகுமார் தாக்கினார் என்பது உண்மை அல்ல என்று கூறினார்.

இந்த மாதம் 18 அன்று சீராலா 2 டௌன் எல்வையில் கிரண், ஆபிரஹாம் ஷைன் என்ற இரு இளைஞர்களும் மாஸ்க் அணியாமல் பைக் மீது அலைந்து கொண்டிருந்ததால் எஸ்ஐ விஜயகுமார் நிறுத்தி இளைஞர்களுக்கு கவுன்சிலிங் அளித்தார் என்று தெரிவித்தார். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் இருவரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்கள் என்று கூறினார். அதனால் இளைஞர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கையில் கிரண் கீழே குதித்து தப்பி ஓட முயற்சித்ததில் தலைக்கு பலமான காயம் ஏற்பட்டது என்று கூறினார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் சிகிச்சை அளித்து வரும் போது கிரண் நேற்று மரணமடைந்ததாகவும் அவர் கூறினார்.

பிரகாசம் மாவட்டம் சீராலா நகரில் போலீசாரின் அக்கிரமத்தால் தலித் இளைஞனின் மரணம் என்று ஆந்திராவில் ஒரே பரபரப்பு.
அந்த இளைஞனை சீராலா அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். நிலைமை மோசமானதால் அங்கிருந்து குண்டூர் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். உடல் நிலைமை தேறாததால் மருத்துவத்திற்காக ஒரு பிரைவேட் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது புதன்கிழமை காலையில் கிரண் மரணமடைந்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

பிரகாசம் மாவட்டம் சீராலாவைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞன் மரணம் பற்றி விவாதமும் போராட்டமுமாக சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.

போலீசாரின் தாக்குதலில் அந்த இளைஞன் மரணித்தார் என்று உள்ளூர் வாசிகளும் தலித் சங்கங்களும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சீராலாவில் 3 நாட்களுக்கு முன்பு கிரண் என்ற இளைஞன் தன் நண்பன் ஆப்ரஹாம் ஷைன் என்பவரோடு சேர்ந்து பைக்கில் வெளியில் வந்தார். இரண்டு சக்கர வாகனத்தின் மீது சென்ற அவர்களளை எஸ்ஐ விஜயகுமார் நிறுத்தி ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டு ஆத்திரப்பட்டார். அதன்பின் என்ன நடந்ததோ… இளைஞன் நினைவு இழந்து கீழே விழுந்ததால் அந்த இளைஞனை சீராலா மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். நிலைமை மோசமானதால் அங்கிருந்து குண்டூரு அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். உடல் நிலை தேறாததால் மேற்கொண்டு மருத்துவத்திற்காக ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சேர்த்தார்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது புதன்கிழமை காலை இளைஞன் மரணம் அடைந்தார்.

போலீஸார் லாட்டியால் அடித்தார்கள் என்றும் அந்த அடியின் காரணமாகவே இளைஞன் மரணித்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். கிரணின் தந்தை மோகன்ராவு சீராலாவில் ரேஷன் டீலராக பணிபுரிந்து வருகிறார்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

சீராலா எஸ்ஐ விஜயகுமார் அதிக உற்சாகம் காட்டி அடித்துக் கொன்றார் என்று தலித் சங்கங்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள். எஸ்ஐ விஜயகுமார் மீது கொலை , எஸ்சி எஸ்டி வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று டிமாண்ட் செய்து வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img