எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

புதுதில்லி:

பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக என்னை நியமித்துள்ளது, எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார்.

புதிய ராணுவ அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் கோவா முதல்வரகப் பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லியே, பாதுகாப்புத் துறையையும் கூடுதலாகக் கவனித்து வந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையை மாற்றி அமைத்தார். வர்த்தக, தொழில் துறையை தனிப் பொறுப்பாக கவனித்து வந்த நிர்மலா சீதாராமனை கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தி, புதிய ராணுவ அமைச்சராக்கினார். இதன்மூலம் ராணுவ அமைச்சர் பதவியை முழு நேரப் பொறுப்பாக ஏற்கும் முதல் பெண் என்ற பெயரையும், முதல் தமிழ்ப் பெண் என்ற சிறப்பையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

இது மிகப்பெரிய அங்கீகாரம் என்று பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
‘‘ராணுவ அமைச்சர் பதவி என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் அந்த பொறுப்பினை நிறைவேற்றுவேன்.

நான் மக்களுக்கும், அதிகாரத்தில் இருப்போருக்கும் இடையே, குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து வந்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இடையே பாலமாக இருப்பேன்’’ என்று கூறினார்.

இதனிடையே நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜேட்லி, ‘‘நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ அமைச்சராக பதவி உயர்வு அளித்திருப்பது குறிப்பிடத் தகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம். அவர் சிறப்பாக செயல்படுபவர். அதனால்தான் உயர்ந்த பொறுப்பினைப் பெற்றுள்ளார். எனது இடத்துக்கு மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரைப் பெற்றிருக்கிறோம் என்பதை உறுதிபடச் சொல்வேன். அவர் இத் துறையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார்’’ என்று பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories