எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

புதுதில்லி:

பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக என்னை நியமித்துள்ளது, எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார்.

புதிய ராணுவ அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் கோவா முதல்வரகப் பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லியே, பாதுகாப்புத் துறையையும் கூடுதலாகக் கவனித்து வந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையை மாற்றி அமைத்தார். வர்த்தக, தொழில் துறையை தனிப் பொறுப்பாக கவனித்து வந்த நிர்மலா சீதாராமனை கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தி, புதிய ராணுவ அமைச்சராக்கினார். இதன்மூலம் ராணுவ அமைச்சர் பதவியை முழு நேரப் பொறுப்பாக ஏற்கும் முதல் பெண் என்ற பெயரையும், முதல் தமிழ்ப் பெண் என்ற சிறப்பையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

இது மிகப்பெரிய அங்கீகாரம் என்று பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
‘‘ராணுவ அமைச்சர் பதவி என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் அந்த பொறுப்பினை நிறைவேற்றுவேன்.

நான் மக்களுக்கும், அதிகாரத்தில் இருப்போருக்கும் இடையே, குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து வந்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இடையே பாலமாக இருப்பேன்’’ என்று கூறினார்.

இதனிடையே நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜேட்லி, ‘‘நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ அமைச்சராக பதவி உயர்வு அளித்திருப்பது குறிப்பிடத் தகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம். அவர் சிறப்பாக செயல்படுபவர். அதனால்தான் உயர்ந்த பொறுப்பினைப் பெற்றுள்ளார். எனது இடத்துக்கு மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரைப் பெற்றிருக்கிறோம் என்பதை உறுதிபடச் சொல்வேன். அவர் இத் துறையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார்’’ என்று பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories