December 5, 2025, 8:47 PM
26.7 C
Chennai

எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

புதுதில்லி:

பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக என்னை நியமித்துள்ளது, எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார்.

புதிய ராணுவ அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் கோவா முதல்வரகப் பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லியே, பாதுகாப்புத் துறையையும் கூடுதலாகக் கவனித்து வந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையை மாற்றி அமைத்தார். வர்த்தக, தொழில் துறையை தனிப் பொறுப்பாக கவனித்து வந்த நிர்மலா சீதாராமனை கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தி, புதிய ராணுவ அமைச்சராக்கினார். இதன்மூலம் ராணுவ அமைச்சர் பதவியை முழு நேரப் பொறுப்பாக ஏற்கும் முதல் பெண் என்ற பெயரையும், முதல் தமிழ்ப் பெண் என்ற சிறப்பையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

இது மிகப்பெரிய அங்கீகாரம் என்று பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
‘‘ராணுவ அமைச்சர் பதவி என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் அந்த பொறுப்பினை நிறைவேற்றுவேன்.

நான் மக்களுக்கும், அதிகாரத்தில் இருப்போருக்கும் இடையே, குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து வந்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இடையே பாலமாக இருப்பேன்’’ என்று கூறினார்.

இதனிடையே நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜேட்லி, ‘‘நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ அமைச்சராக பதவி உயர்வு அளித்திருப்பது குறிப்பிடத் தகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம். அவர் சிறப்பாக செயல்படுபவர். அதனால்தான் உயர்ந்த பொறுப்பினைப் பெற்றுள்ளார். எனது இடத்துக்கு மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரைப் பெற்றிருக்கிறோம் என்பதை உறுதிபடச் சொல்வேன். அவர் இத் துறையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார்’’ என்று பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories