பூமி பூஜை போட்டாச்சி… பாட்டி இனி நீ சாப்பிடலாம்!

Published:

urmila chaturvedi - 2026

அயோத்தியில் இன்று ராம ஜன்ம பூமியில் புதிய ராமர் ஆலயம் அமைவதற்கான பூமி பூஜை இனிதே நடைபெற்றது. ஆனால், ராமர் கோயிலுக்காக சாப்பாட்டை நிறுத்தி வைத்திருந்தார் ஒரு மூதாட்டி. அவர் இனி சாப்பிடலாம் என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்.

ஜபல்பூரைச் சேர்ந்த இந்த முதியவர் பெயர் ஊர்மிளா சதுர்வேதி. வயது 82. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் வசித்து வருகிறார். 1992ல் அயோத்தியில் கலவரங்கள் ஏற்பட்டபோது ராம மந்திர் கட்டும் வரை உணவு உண்ண மாட்டேன் என்று முடிவு எடுத்தார்.

அப்போதில் இருந்து இப்போது வரை பழங்களை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ராமாயணம் படித்தும் பிரார்த்தனை செய்தும் காலம் கடத்தி வந்தார்.

urmila chaturvedi1 - 2026

இன்று வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறியது. பிரதமர் நரேந்திர மோடி யின் கரங்களால் அயோத்தி ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் வெற்றிகரமாக நடந்தேறியது.

இப்போது அவருடைய உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் அவரை உணவு உண்ணும்படி மகிழ்ச்சியாக கூறி வருகிறார்கள்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img