இங்கேயே இருந்தால் இறந்து விடுவோம்… கோவிட் சென்டரில் கொரோனா நோயாளிகள் போராட்டம்!

covid-patients
covid-patients

நெல்லூர் மாவட்டம் கூடூரில் தமக்கு அடிப்படை வசதிகள்கூட ஏற்படுத்தித் தரவில்லை என்று கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலான மருத்துவம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் எத்தனை எடுத்துச் சொன்னாலும் சில இடங்களில் சில மருத்துவ ஊழியர்கள் மட்டும் தம் வழி முறையை மாற்றிக் கொள்வதில்லை. நோயாளிகளை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு நோயாளிக்கும் தினமும் 500 ரூபாய் செலவில் உணவளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பலமுறை உத்தரவிட்டுள்ளார். நோயாளிகளுக்கு எந்த நிலைமையிலும் மேலான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதல்வர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனாலும் சில இடங்களில் மிகவும் மோசமான சூழ்நிலைகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டே உள்ளன.

covid-patients1
covid-patients1

அண்மையில் நெல்லூர் மாவட்டம் கூடூர் நகரத்தில் உள்ள கோவிட் சென்டரில் நோயாளிகள் சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தம்மை இங்கு கண்டுகொள்பவர்கள் யாருமே இல்லை என்றும் ட்ரீட்மென்ட் சரியாக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்கள்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

தமக்கு சரியான மருத்துவமும் மேற்பார்வையும் இல்லை என்றும் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தரவில்லை என்றும் ஆத்திரப்பட்டார்கள். இத்தகு நிலைமையில் கோவிட் கேர் சென்டர் இருக்கும்போது இந்த இடத்தில் நாங்கள் எதற்காக இருக்க வேண்டும்? எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள். தனியார் மருத்துவமனையில் நாங்கள் சென்று சேருகிறோம். அல்லது வீட்டிலேயே இருந்து தகுந்த ஜாக்கிரதை எடுத்துக் கொள்வோம் என்று அவர்கள் கூறிவருகிறார்கள்.

எந்த வசதியும் இன்றி இங்கேயே இருந்தால் நாங்கள் இறந்து போவது நிச்சயம் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories