சீர்காழி அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி… காவல் நிலையத்தில் புகார்!

sirgazhi-petition1
sirgazhi-petition1

சீர்காழி அருகில் காத்திருப்பில் உள்ள கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி கோயில் அர்ச்சகர் கே.ஆர்.சந்திரசேகர சிவாச்சார்யார், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பண்டரிநாதன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செம்பனார் கோயில் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 73, காத்திருப்பு சிவன் தெற்கு வீதியில் அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால திருக்கோயில் இதுவாகும்.

ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெறுவதுடன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம். தினந்தோறும் ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இத்திருக்கோயிலிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் தென் பாதி தெருவில் “அக்னி ஜூவாலை ” என்ற கிறிஸ்தவ ஜெபக் கூடம், செயல்பட்டு வருகிறது.ஒரு கிறிஸ்தவர் கூட வசிக்காத இப்பகுதியில் அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் இந்த கிறிஸ்தவ ஜெபக்கூடம் இயங்கி வருகிறது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளுடன் வெளியூர்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து ஜெபம் செய்கிறோம் என்ற போர்வையில் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

sirgazhi-petition
sirgazhi-petition

இதனால் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் இப்பகுதி வாழ் அப்பாவி மக்களின் அமைதியான வாழ்க்கை முறை கேள்விக் குறியாகியுள்ளது. மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் செயல்படும் இந்த கிறிஸ்தவ ஜெபக் கூடத்தினால் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

இதனால் வருங்காலங்களில் மத ரீதியிலான மோதல்கள் உருவாக வாய்ப்புகளுள்ளது. பழமையான சிவாலயத்தின் வழிபாடுகளுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் செயல்பாடுகள் உள்ளன. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபால் அவர்கள் தலைமையிலான கமிஷன் “ஒரு வழிபாட்டுத் தலத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் வேற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலம் அமையக் கூடாது” எனக் கூறியுள்ளது.

கிறிஸ்தவர்களே இல்லாத இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் திருக்கோயில் பூஜைகளுக்கு இடையூறு செய்யும் விதமாகவும், அப்பாவி மக்களுக்கு ஆசை காட்டி மோசடியாக மதமாற்றம் செய்யும் தீய எண்ணத்துடனும் செயல்பட்டு வரும் மேற்படி “அக்னி ஜூவாலை ” என்னும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை இப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்திட வேண்டுமென கிராமவாசிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories