குடி கெடுத்த குடி! தொல்லை தாங்காமல் நள்ளிரவில் தந்தையை தூக்கிலிட்ட மகள்கள்!

Published:

drunk
drunk

தெலங்காணா… தொல்லை தாங்காமல் நள்ளிரவில் தந்தையை தூக்கிலிட்ட மகள்கள்.

மதுவுக்கு அடிமையாகி தினமும் தொல்லை கொடுத்த தந்தையை மகள்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். சில வருடங்களாக தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளோரை தொல்லை செய்வதும் பலமுறை அவமதித்து வன்முறைக்கும் முயற்சித்த தந்தையின் நடத்தை பிடிக்காமல் இரு பெண்களும் சேர்ந்து அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஹைதராபாத் ஜெகத்கிரிகுட்டா சீசலபஸ்தியில் திங்களன்று இரவு இந்த சம்பவம் நேர்ந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் கங்காரெட்டி தெரிவித்த விவரங்கள்…

சீசலபஸ்தியில் வசித்துவரும் ராஜூ (45) தினக்கூலி. அவருக்கு இரு மகள்கள். பெரிய மகள் இன்டர்மீடியட். சின்ன மகள் எட்டாவது படித்து வருகிறார்கள். தாய் அண்மையில் இறந்து போனதால் தந்தையோடு மகள்கள் வசித்து வருகின்றனர்.

குடிக்கு அடிமையான ராஜு தினமும் குடித்துவிட்டு வருவதும் மகள்களை தொல்லை செய்வதுமாக இருந்து வந்தார். சிலமுறை வன்முறைக்கு கூட முயற்சித்தார். தந்தை செய்யும் கொடூரங்களை மகள்கள் பயத்தோடு பொறுத்திருந்தனர். திங்களறன்று இரவு குடித்த மயக்கத்தில் மகள்களிடம் சோறு போடும்படி கூறி அடித்து துன்புறுத்தினார். அதனால் எரிச்சல் அடைந்த இருவரும் தந்தையை கொல்ல வேண்டும் என்று தீர்மானத்திற்கு வந்தார்கள். குடித்த மயக்கத்தில் படுத்திருந்த தந்தைக்கு நள்ளிரவில் கழுத்தில் சுருக்கிட்டு கொன்று விட்டார்கள்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

மறுநாள் காலையில் ராஜுவின் நண்பர் வந்து பார்த்து போலீசாருக்கு தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் இருவருமே மைனர் என்பதால் அவர்களை சிறுவர் சீர்த்திருத்த முகாமுக்கு அனுப்புவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img