செப்.7 முதல் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி; மத்திய அரசின் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்!

lockdown
lockdown

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கின் போது நான்காம் கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 30 வரை அமலில் உள்ள ஊரடங்கின் போது மெட்ரோ ரயில்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது 

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது மேலும் செப்டம்பர் 21 முதல் 100 பேரை கொண்டு கலாச்சார, பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம் 

செப்டம்பர் 21 முதல் 100 பேருடன் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தலாம். திறந்தவெளி அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

கல்வி நிலையங்களில் 50 சதவீத ஆசிரியர்களை வரவழைத்து ஆன்லைன் வழியில் பாடம் நடத்தலாம் . 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப் படுகிறது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத பகுதிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப் படும். 

அதே நேரம், செப்டம்பர் 30ஆம் தேதி  வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் ! திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செப்டம்பர் மாதத்திலும் மூடப்பட்டிருக்கும்!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.  மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது என்றும், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் உள்ளூர் ஊரடங்குகளை பிறப்பிக்க கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. 

அதே போல், போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்றும் தெளிவாக்கியிருக்கிறது. 

  • UNLOCK-4.0 :
  • செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ இரயில்கள் இயங்க அனுமதி.
  • அரசியல், கலை, விளையாட்டு நிகழ்வுகளை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 100 பேர்களுடன் நடத்தலாம்.
  • செப்டம்பர் 30-ஆம்  தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.
  • திறந்தவெளி திரை அரங்குகள் 21 ம் தேதி முதல் செயல்பட அனுமதி.
  • மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள் சென்றுவர முழு அனுமதி உண்டு. இ-பாஸ் மாதிரியான சிறப்பு அனுமதி தேவையில்லை.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் லாக்-டவுன் அமல்படுத்த மாநிலங்களுக்கு உரிமை இல்லை.
  • அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories