கருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்!

Published:

tirumala-tirupathi-perumal1
tirumala-tirupathi-perumal1

திருமலை சீனிவாசனின் பிரம்மோற்சவ கொண்டாட்டங்கள் வைபவமாக நடந்துவருகின்றன. ஐந்தாம் நாளான புதன்கிழமை காலையில் மோகினி வடிவத்தில் சர்வாலங்கார பூஷிதராக தந்தப் பல்லக்கில் தரிசனமளித்த ஸ்ரீநிவாசர் மாலையில் கருட வாகனத்தின் மீது கொலு வீற்றிருந்தார்.

முதல்வர் ஜெகன் உட்பட பல அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் சுவாமியின் வாகன சேவையில் பங்கு கொண்டார்கள்.

garuda-sevai
garuda-sevai

கோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.

அதற்கு முன்பாக ஆந்திர அரசாங்கத்தின் தரப்பில் முதல்வர் ஜெகன் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.

சிஎம் ஜகன் பயணத்தின் பின்னணியில் திருமலா திருப்பதி பகுதிகளில் போலீசார் கட்டுதிட்டமான பந்தோபஸ்து ஏற்பாடுகளை செய்தார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img