திருமலை சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன், எடியூரப்பா!

Published:

ap-jagan-yediyurappa
ap-jagan-yediyurappa

திருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கு கொண்டனர் இரு மாநில முதல்வர்கள்!

திருமலை ஸ்ரீபாலாஜியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வியாழக்கிழமை காலை மீண்டும் ஒருமுறை தரிசித்து கொண்டார்.

முதல்வர் ஜகனோடு கூட கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் சுவாமி தரிசனம் செய்து கொண்டார். தரிசனத்திற்கு வந்த கர்நாடக முதலமைச்சரை மகா த்வார பிரவேச மார்க்கம் அருகில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்பு கொடுத்தார்.

ap-jagan-yediyurappa1
ap-jagan-yediyurappa1

தரிசனத்திற்கு பிறகு வேத பண்டிதர்கள் இரு முதல்வர்களுக்கும் தீர்த்த பிரசாதமும் ஆசீர்வசனங்களும் அளித்தார்கள் .

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகனோடு கூட திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி, துணை முதல்வர் ஆள்ள நானி, அமைச்சர்கள் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, பெல்லம்பள்ளி ஸ்ரீனிவாஸ், எம்எல்ஏ ரோஜா பங்கு கொண்டார்கள்.

ap-jagan-mohan
ap-jagan-mohan

ஸ்ரீவாரி தரிசனம் முடிந்த பிறகு கோவிலின் எதிராக உள்ள நாத நீராஜனம் மண்டபத்திற்கு இரு மாநில முதல்வர்களும் வந்தடைந்தார்கள். லோக க்ஷேமத்திற்காக கொரோனா பரவல் நிவாரணத்தை முன்னிட்டு டிடிடி சென்ற மார்ச் மாதத்திலிருந்து தன்வந்திரி மகாயாகம், யோக வாசிஷ்டம், கீதா பாராயணம், சுந்தரகாண்ட பாராயணம் நடத்தி வருகிறது. சுந்தரகாண்டம் நிகழ்ச்சியில் இரு முதல்வர்களும் பங்கு கொண்டார்கள்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

காலை 8:10 மணிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவோடு சேர்ந்து முதல்வர் ஜெகன் கர்நாடகா சத்திரங்களின் பவனம் நிர்மாணத்திற்குரிய பூமி பூஜையில் பங்கு கொண்டார்கள். அதன் பிறகு காலை 10:20 மணிக்கு ரேணிகுண்டா ஏர்போர்ட்டில் இருந்து சிஎம் ஜகன் கன்னவரம் கிளம்பிச் செல்வார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img