பட்டாசு வெடிக்க விதித்த தடையை, மாநிலங்கள் திரும்பப் பெற விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை!

crackers-1
crackers-1

பட்டாசு வெடிக்க தடை விதித்த மாநிலங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் (தென்தமிழகம்) பா சரவணன் கார்த்திக் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்… ராஜஸ்தான் ஒடிசா டெல்லி ஹரியானா மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. சிவகாசியில் பட்டாசு தயாரித்தாலும் இந்தியா முழுவதும் பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரம் பட்டாசை மையப்படுத்தியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகாசியில் பிரிண்டிங் தொழிலும் இங்கு பட்டாசு தொழிலை மையப்படுத்தி உள்ளது. சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தே சீனி வெடி லட்சுமி வெடி போன்ற பல வீடுகளுக்கு தேவையான பேப்பர்களை சுருட்டி கொடுத்து தங்களின் வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்கிறார்கள்.

மேலும் பல லட்ச மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலில் மிகப் பெரிய அளவில் வருவாய் உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவையும் கடைப்பிடிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் விதமாகவும் தீபாவளியை நீர்த்து போக செய்யும் வகையிலும் செயல்பட்டு தடை விதித்திருக்கும் மாநிலங்களை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.

crackers
crackers

ஒரு வாரமே இருக்கும் நிலையில் இது போன்ற தடைகள் பட்டாசு விற்பனையை மட்டுமல்ல பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய செயலுமாகும். அதுமட்டும் அல்லாமல் இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றும் சுற்றுப்புறச் சூழலும் பெரிய அளவில் மாசு அடைந்து விட போவதில்லை. மேலும் இந்த தடையானது ஹிந்து பண்டிகைகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தடையாகவே மட்டுமே நாங்கள் கருதுகிறோம்

இந்த விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசும் இதில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி தடையை நீக்க செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி என்ன என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கூறமுடியுமா?

மேலும் பட்டாசு தடை வழக்கு தொடர்பவர்களின் பின்புலத்தை அரசு, உளவுத்துறை கொண்டு ஆராய வேண்டும். மேலும் இந்த தடையை விதித்து இருக்கும் மாநிலங்கள் தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் விருதுநகர் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories