பேங்க் லாக்கரில் வைத்த தங்க நகைகள் மாயம்! உண்மை தெரிந்து ‘ஷாக்’ ஆன பெண்!

Published:

bank-locker
bank-locker

ஒரு பெண்மணி தன் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அந்த நகைகள் காணாமல் போனதால் போலீசாருக்கு புகார் அளித்தார். விசாரணையில் வெளிவந்த விவரங்களை கேட்டு வாயடைத்துப் போனார்.

கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெண்மணி வங்கி லாக்கரில் வைத்த தங்க நகைகள் காணாமல் போனது தெரிந்த உடனே போலீசாருக்கு புகார் அளித்தார். அவர்கள் விசாரணை மேற்கொண்டு என்ன நடந்தது என்று தெரிவித்த போது அவர் வாயடைத்துப் போனார்.

குடிவாடாவில் குத்தா விஜயலட்சுமி வசித்து வருகிறார். அவருடைய பிறந்த ஊர் வேலேரு என்பதால் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவருடைய மகன் ஹிரண் தீய பழக்கங்களுக்கு அடிமையானான். கெட்ட பழக்கங்களுக்கு பணம் இல்லாததால் தாயை ஏமாற்ற திட்டம் தீட்டினான். தாய் தங்க நகைகளை வங்கியில் வைத்துள்ளார் என்பதை அறிந்துகொண்டான்.

இந்த மாதம் 10 ம் தேதி வங்கி ஊழியர் யார்லகட்டா மதன்மோகன உதவியோடு லாக்கரை திறந்து அதில் இருந்த 60 கிராம் தங்க நகைகளை எடுத்துள்ளான். அவற்றை எடுத்துச் சென்று முத்தூட் ஃபைனான்ஸில் அடகு வைத்து கொஞ்சம் பணம் பெற்று தன் கெட்ட பழக்கங்களுக்கு செலவு செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு லாக்கரில் இருந்த தங்க நகைகள் காணாமல் போன விஷயம் விஜயலட்சுமிக்கு தெரிய வந்தது உடனே போலீசாருக்கு புகார் அளித்ததும் போலீசார் களத்தில் இறங்கினர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

வங்கி அதிகாரிகளை விசாரித்தபோது பெண்மணியின் மகனே லாக்கரில் இருந்த நகைகளை திருடியது தெரிந்தது. வங்கி ஊழியரைம் பெண்மணியின் மகனையும் போலீசார் கைது செய்தார்கள்.

நூஜிவீடு கோர்ட்டில் நிறுத்தினார்கள். இடைத்தரகர்கள் உதவியோடு தங்கத்தை கூட கைப்பற்றினார்கள். ஹிரண் இன்டர் படித்து வருகிறான். அவன் தீய பழக்கங்களுக்கு அடிமையானதால் லாக்கரிலுள்ள தங்க நகைகளைத் திருடியுள்ளான்.

வங்கி நிபந்தனைகளுக்கு எதிராக அதில் பணிபுரியும் ஊழியரே இதற்கு உதவி செய்ததால் இருவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img