ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம்! வியாபாரம் அமோகம்!

Published:

sonusood
sonusood
  • ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம். வியாபாரம் அமோகம்.
  • பேகம்பேட்டில் உள்ள சிறிய ஃபாஸ்ட்ஃபுட் சென்டருக்கு சென்ற சோனூசூட். வீடியோ வைரல்.

‘சைனா பாஸ்ட்புட்’ சென்டர் கொரோனா காரணமாக நஷ்டத்தில் ஓடியது. அதன் பெயரை மாற்றி சோனூசூட் சென்டர் என்று மாற்றியபின் இப்பொழுது வியாபாரம் படுஜோராக நடக்கிறது. அங்கு சென்று சமையல் செய்த சோனூசூடைப் பார்த்து மகிழ்ந்து போன உள்ளூர் மக்கள்.

கொரோனா பரவலின் போது ஏழைகளுக்கு உதவி புரிந்த உயர்ந்த மனதைக் கொண்ட சினிமா நடிகர் சோனுசூடுக்கு பல இடங்களில் சிலை வைத்து கோவில் கட்டி வழிபாடு நடக்கிறது. சிலர் தம் கடைகளுக்கு சோனூசூட் பெயரைச் சூட்டி உள்ளார்கள். சிலர் தம் பிறந்த குழந்தைகளுக்கு அவர் பெயரைச் சூட்டி மகிழ்கிறார்கள்.

sonusood1
sonusood1

ஹைதராபாத் பேகம்பேட்டில் ஒருவர் சோனூசூட் பாஸ்ட் ஃபூட் சென்டர் என்ற பெயரில் சிறிய உணவகம் நடத்துகிறார். அந்த ஃபாஸ்ட் புட் சென்டருக்கு சோனூசூட் சர்ப்ரைஸ் விசிட் செய்தார். உணவகத்தின் முதலாளியுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் சோனூசூடைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இதற்கு முன்னர் அதற்கு சைனா ஃபாஸ்ட ஃபுட் சென்ட்ர் என்ற பெயர் இருந்தது. சைனா என்ற பெயர் இருந்ததால் கொரோனா பின்னணியில் அவருடைய வருமானம் விழுந்து விட்டது.

sonusood2
sonusood2

அதே நேரத்தில் ஏழைகளுக்கு உதவி புரிந்து ரியல் ஹீரோவாக பெயர்பெற்ற சோனூசூடின் பெயரை சென்டருக்கு வைத்தார். அதனால் அவருக்கு மீண்டும் கிராக்கி அதிகம் ஆகி வியாபாரம் பன்மடங்கு பெருகியது. சோஷல் மீடியாக்கள் மூலம் இந்த விஷயத்தை சோனூசூட் அறிந்து கொண்டு அங்கு சென்று அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

அந்த பாஸ்ட்புட் சென்டரில் அவருக்குப் பிரியமான ஃப்ரைட் ரைஸ், மன்சூரியன் உணவுகளை உண்டு மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறி மகிழ்ந்தார். அங்கு சில உணவுகளை கிண்டிக் கிளறி வந்திருந்த ரசிகர்களை மகிழ்வித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img