December 5, 2025, 7:48 PM
26.7 C
Chennai

இலவச உள்ளாடை திட்டம் என்று பெண்களுக்கு வலை!

cell phone
cell phone

இலவச உள்ளாடைகள் திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவர்கள் என பெண்களிடம் பேசி பதிலுக்கு அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை கேட்ட இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர். போலி கடன் திட்டம், ஆன்லைனில் பெண்களை தொடர்பு கொண்டு ‘இலவச உள்ளாடை திட்டம்’ என மோசடி செய்த அந்த பலே ஆசாமி மீது 420, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத்தின் சந்கேதா பகுதியைச் சேர்ந்த சூரஜ் கேவ்லே (வயது 25) என்ற இளைஞர், 18 வயது பெண் ஒருவரை தொடர்பு கொண்டு விளம்பரத்திற்காக இலவசமாக உள்ளாடைகள் தருவதாக கூறி பேசியிருக்கிறார். இதற்காக தங்களின் சுய விவரங்களை தருமாறும் அவர் கோரியிருக்கிறார். இதன் பின்னர் அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து தொல்லை அளித்ததாக
கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பெண் அகமதாபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசாரை அணுகி புகார் அளித்தன் பேரில் சூரஜ் கேவ்லேவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி, 354 டி (பின் தொடர்ந்தல்), 500 (மான நஷ்டம் ஏற்படுத்துதல் மற்றும் ஐடி பிரிவு ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது போல மேலும் சில பெண்களுக்கும் அவர் வலை வீசியது தெரியவந்தது.

இவர் மேலும் ஒரு மோசடியில் சம்மந்தப்பட்டிருப்பது சைபர் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதன் படி அகமதாபாத்தை சேர்ந்த மேலும் ஒருவரை அவர் ஏமாற்றியிருப்பது கண்டறியப்பட்டது.

ஆன்லைனில் தொடர்பு கொண்ட ஒருவர் 5.8 லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி அதற்கான முன் மாதாந்திர செலுத்த தொகையாக 1.35 லட்சத்தை தன்னுடைய பே-டிஎம் கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். அதனை நம்பிய புகார் அளித்த நபரும் சூரஜின் கணக்கிற்கு 1.35 லட்சம் ரூபாயை அனுப்பியிருக்கிறார். அதன் பின்னர் சூரஜ்-ன் தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது எனவும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கும் சூரஜ் மீது பதிவு செய்யப்பட்டது.இது போன்ற மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் விழுந்துவிடாமல் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories