December 5, 2025, 4:21 PM
27.9 C
Chennai

காட்டு யானை தாக்கி 26 வயது இளம்பெண் உயிரிழப்பு! சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த பரிதாபம்!

elephant
elephant

சுற்றுலா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த கல்லூரி பேராசிரியை காட்டு யானை மிதித்து பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் வயநாடு அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்குள்ள இயற்கை எழிலை ரசிப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும் சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. வனப் பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை ரசிப்பதற்காகவும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த சஹானா சத்தார் (26) என்பவர் தன்னுடைய 2 உறவினர்களுடன் வயநாடு மாவட்டம் மேப்பாடி எளம்பிலேறி என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதிக்கு சென்றார்.

sahana
sahana

இவர் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உளவியல் துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். இந்த சுற்றுலா விடுதி அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளது. அது இரவில் வன விலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதியாகும். வனவிலங்குகளை இரவில் ரசிப்பதற்காக அந்த சுற்றுலா விடுதி சார்பில் டெண்டுகள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

அங்கு சுற்றுலா பயணிகள் தங்குவது உண்டு. இதுபோன்ற ஒரு டெண்டில் தான் சஹானா சத்தாரும், அவரது உறவினர்களும் தங்கியிருந்தனர். நேற்று இரவு சாப்பிடுவதற்காக சஹானா சத்தார் வெளியே வந்தார். அப்போது அங்கு ஒரு காட்டு யானை ஒன்று வந்தது. இரவு நேரம் என்பதால் யானையை அவர் கவனிக்கவில்லை.

திடீரென அந்த யானை பிளிறியபடியே அவரை விரட்டியது. அப்போது சஹானா தடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த யானை சஹானாவை காலால் மிதித்தது. சத்தத்தைக் கேட்ட அவருடன் வந்த உறவினர்கள் சஹானாவை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் யானை அவர்களையும் விரட்டியதால் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து விடுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று சஹானாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

யானை மிதித்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்பகுதி தாசில்தாருக்கு வயநாடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories