காட்டு யானை தாக்கி 26 வயது இளம்பெண் உயிரிழப்பு! சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த பரிதாபம்!

elephant
elephant

சுற்றுலா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த கல்லூரி பேராசிரியை காட்டு யானை மிதித்து பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் வயநாடு அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்குள்ள இயற்கை எழிலை ரசிப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும் சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. வனப் பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை ரசிப்பதற்காகவும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த சஹானா சத்தார் (26) என்பவர் தன்னுடைய 2 உறவினர்களுடன் வயநாடு மாவட்டம் மேப்பாடி எளம்பிலேறி என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதிக்கு சென்றார்.

sahana
sahana

இவர் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உளவியல் துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். இந்த சுற்றுலா விடுதி அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளது. அது இரவில் வன விலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதியாகும். வனவிலங்குகளை இரவில் ரசிப்பதற்காக அந்த சுற்றுலா விடுதி சார்பில் டெண்டுகள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

அங்கு சுற்றுலா பயணிகள் தங்குவது உண்டு. இதுபோன்ற ஒரு டெண்டில் தான் சஹானா சத்தாரும், அவரது உறவினர்களும் தங்கியிருந்தனர். நேற்று இரவு சாப்பிடுவதற்காக சஹானா சத்தார் வெளியே வந்தார். அப்போது அங்கு ஒரு காட்டு யானை ஒன்று வந்தது. இரவு நேரம் என்பதால் யானையை அவர் கவனிக்கவில்லை.

திடீரென அந்த யானை பிளிறியபடியே அவரை விரட்டியது. அப்போது சஹானா தடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த யானை சஹானாவை காலால் மிதித்தது. சத்தத்தைக் கேட்ட அவருடன் வந்த உறவினர்கள் சஹானாவை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் யானை அவர்களையும் விரட்டியதால் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து விடுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று சஹானாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

யானை மிதித்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்பகுதி தாசில்தாருக்கு வயநாடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories