February 8, 2025, 9:44 PM
27.1 C
Chennai

பாலியல் சீண்டல் குறித்த சர்ச்சை தீர்ப்பு: மும்பை நீதிபதிக்கு அதிர்ச்சி கொடுத்த கொலீஜியம்!

pushpa-ganediwala
pushpa-ganediwala

உடலோடு உடல் தீண்டாமல், ஆடையுடன் தீண்டுவது, பாலியல் சீண்டல்கள் ஆகாது எனத் தெரிவித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேதிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமித்த பரிந்துரையை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்ற கொலிஜீயம்!

போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு அளித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேதிவாலாவை, நிரந்தர நீதிபதி ஆக்கும் பரிந்துரையை திரும்பப் பெற்றுள்ளது உச்ச நீதிமன்ற கொலீஜியம்.

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் நீதிபதியாக பணியாற்றி வரும் புஷ்பா கனேதிவாலா, போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், ‘உடலுறவு கொள்வதைத் தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பாலியல் அத்துமீறல் ஆகும்’ என்று தீர்ப்பு அளித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புஷ்பா கனேதிவாலாவின் இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதே போல் வேறொரு போக்சோ சட்டத்தின் கீழான வழக்கில், சிறுமியின் கையைப் பிடித்திழுப்பது, பேன்ட் ‘ஜிப்’ திறந்திருப்பது ஆகியவை பாலியல் அத்துமீறல் ஆகாது’ என தீர்ப்பு கொடுத்தார்.

இன்னொரு வழக்கில் இதே போல் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு கொடுத்திருந்தார் புஷ்பா கனேதிவாலா. அந்தத் தீர்ப்பில், “இந்த வழக்கில் சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தார் என்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பலவந்தப் படுத்தி பலாத்காரம் செய்திருந்தால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், பாதிக்கப்பட்டவர் உடலில் காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கவில்லை. எனவே இருவரும் விருப்பப்பட்டே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து இவரது தீர்ப்புகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜன.20 ஆம் தேதி நீதிபதி புஷ்பாவை, மும்பை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் என்.வி.ரமணா, பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்ததை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்ற கொலீஜியம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories