December 6, 2025, 10:18 PM
25.6 C
Chennai

கொரோனா: முன்னாள் இராணுவ அதிகாரியும், மனைவியும் உயிரிழப்பு! ஒரே மேடையில் தகனம்!

athma
athma

தில்லியில் 96 வயதான இந்திய ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றியவர் இறந்த சில மணிநேரங்களில் அவரது மனைவியும் இறந்ததால் இருவரது உடல்களையும் ஒரே தகனமேடையில் வைத்து எரித்தனர்.

இந்திய ராணுவத்தின் 17 ஆவது குமான் ரெஜிமென்ட்டை உருவாக்கியவர் பிரிகேடியர் ஆத்மா சிங். இவர் 1971 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரை வழிநடத்தினார்.

போர் நடந்த போது ஆத்ம சிங் துணை நிலை கலோனலாக பணிபுரிந்த போது அவரது வயிற்று பகுதி மற்றும் கையில் துப்பாக்கியால் 1971-ஆம் ஆண்டு சுடப்பட்டார்.

தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் எம்பிஏ படித்தார். அவருக்கு ஹாக்கி விளையாடுவதும் புத்தகங்களை படிப்பதும் எழுவதும் மிகவும் பிடிக்கும்.

அவருக்கும் அவரது மனைவி சரளா ஆத்மாவுக்கும் (83) கொரோனா தொற்று ஏற்பட்டது.

mr mrs athma
mr mrs athma

தொற்றானது கடந்த வாரம்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்மா சிங் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். அவரது மனைவி சரளா மேதான்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆத்மா சிங் நேற்றைய தினம் வீட்டில் காலமானார். இவர் காலமான சிறிது நேரத்தில் மனைவி சரளாவும் காலமானார். இறப்பிலும் பிரியாத இவர்களை ஒரே தகனமேடையில் வைத்து எரியூட்டினர்.

இதுகுறித்து அவர்களது மூத்த மகளும் ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏவுமான கிரண் சவுத்ரி கூறுகையில் இருவரின் இழப்பால் நான் மிகவும் உடைந்து போயுள்ளேன்.

athma1
athma1

இருவரும் ஒரே நேரத்தில் இறப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் விரும்பினர். எனது தாயை இறப்பிலும் பிரியமாட்டேன் என எனது அப்பா அடிக்கடி கூறுவார்.

எனது தந்தை வீட்டில் உயிரிழந்தார். எனது தாய் மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவரது உடல்களையும் ஒரே தகனமேடையில் வைத்து எரித்தோம்.

எங்கள் தந்தையின் வீரத்தை பற்றி நாங்கள் பேசியதில்லை. ஏனெனில் அவரது சாதனைகள் அனைத்து ரகசிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

எனது தந்தை எளிமையான மனிதர். அவர் ராணுவத்தை விரும்பினார். போர் புரியும் போது கூட அவர் அது குறித்து எங்களிடம் எதையும் பேச மாட்டார் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories