கொரோனா: முன்னாள் இராணுவ அதிகாரியும், மனைவியும் உயிரிழப்பு! ஒரே மேடையில் தகனம்!

athma
athma

தில்லியில் 96 வயதான இந்திய ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றியவர் இறந்த சில மணிநேரங்களில் அவரது மனைவியும் இறந்ததால் இருவரது உடல்களையும் ஒரே தகனமேடையில் வைத்து எரித்தனர்.

இந்திய ராணுவத்தின் 17 ஆவது குமான் ரெஜிமென்ட்டை உருவாக்கியவர் பிரிகேடியர் ஆத்மா சிங். இவர் 1971 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரை வழிநடத்தினார்.

போர் நடந்த போது ஆத்ம சிங் துணை நிலை கலோனலாக பணிபுரிந்த போது அவரது வயிற்று பகுதி மற்றும் கையில் துப்பாக்கியால் 1971-ஆம் ஆண்டு சுடப்பட்டார்.

தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் எம்பிஏ படித்தார். அவருக்கு ஹாக்கி விளையாடுவதும் புத்தகங்களை படிப்பதும் எழுவதும் மிகவும் பிடிக்கும்.

அவருக்கும் அவரது மனைவி சரளா ஆத்மாவுக்கும் (83) கொரோனா தொற்று ஏற்பட்டது.

mr mrs athma
mr mrs athma

தொற்றானது கடந்த வாரம்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்மா சிங் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். அவரது மனைவி சரளா மேதான்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆத்மா சிங் நேற்றைய தினம் வீட்டில் காலமானார். இவர் காலமான சிறிது நேரத்தில் மனைவி சரளாவும் காலமானார். இறப்பிலும் பிரியாத இவர்களை ஒரே தகனமேடையில் வைத்து எரியூட்டினர்.

இதுகுறித்து அவர்களது மூத்த மகளும் ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏவுமான கிரண் சவுத்ரி கூறுகையில் இருவரின் இழப்பால் நான் மிகவும் உடைந்து போயுள்ளேன்.

athma1
athma1

இருவரும் ஒரே நேரத்தில் இறப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் விரும்பினர். எனது தாயை இறப்பிலும் பிரியமாட்டேன் என எனது அப்பா அடிக்கடி கூறுவார்.

எனது தந்தை வீட்டில் உயிரிழந்தார். எனது தாய் மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவரது உடல்களையும் ஒரே தகனமேடையில் வைத்து எரித்தோம்.

எங்கள் தந்தையின் வீரத்தை பற்றி நாங்கள் பேசியதில்லை. ஏனெனில் அவரது சாதனைகள் அனைத்து ரகசிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

எனது தந்தை எளிமையான மனிதர். அவர் ராணுவத்தை விரும்பினார். போர் புரியும் போது கூட அவர் அது குறித்து எங்களிடம் எதையும் பேச மாட்டார் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories