ஜூன் 2. இன்று தெலங்காணா மாநில உதய தினம்! பிரதமர் வாழ்த்து!

telangana day1
telangana day1

முதல்வர் கேசிஆர் மாநில மக்களுக்கு தெலங்காணா உதய தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார். இன்று அரசு விடுமுறை நாள்.

2014 ஜூன் இரண்டாம் தேதி தெலங்காணா மாநிலம் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக மாறியது. அன்று முதல் ஆண்டுதோறும் ஜூன் 2 மாநில உதய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கலை நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் மூலம் தெலங்காணாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தனி மாநிலம் பெற மேற்கொண்ட தியாகங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இன்று புதன்கிழமையோடு மாநிலம் தோன்றி ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக நிகழ்ச்சிகள் ஆடம்பரமின்றி நடத்தப் படுகின்றன.

முதல்வர் கேசிஆர் உரையாற்றுகையில், “போராட்டங்கள், தியாகங்கள், பலி தானங்கள் மூலம் தனி மாநிலத்தை சாதித்தோம்” என்று தெரிவித்தார். “பாரத தேசம் கர்வப்படும் விதமாக தெலங்காணாவை வழிநடத்தி வருகிறோம். ஏழு ஆண்டுகளில் ஸ்திரத்தன்மையைப் பெற்று போராட்ட கால முழக்கங்களை ஒன்றொன்றாக அமல்படுத்தி வருகிறோம். பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் நிலையில் உள்ளோம்.

telangana day
telangana day

மாநில வளர்ச்சியின் மூலம் அன்று நிகழ்த்திய தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். வேளாண் தொழில் புனர்நிர்மாணமே லட்சியமாகக் கொண்டு முன்னேறி வருகிறோம். கிராமிய அமைப்பை வலிமை மிக்கதாக செய்வதில் வெற்றி பெற்றுள்ளோம். பொது மக்களின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பே இதற்கு காரணம்” என்று கூறி முதல்வர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“மக்களின் விசுவாசமும் ஆதரவுமே எங்களை தைரியமாக முன்னோக்கி நடத்துகிறது. தெலங்காணா மாநிலத்தை ‘தங்கத் தெலங்காணா’வாக மாற்றும் வரை ஓயமாட்டோம்” என்று முதல்வர் சந்திரசேகர ராவு தெரிவித்தார்.

‘கன் பார்க்’கில் முதல்வர் கேசிஆர் அமர வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் கொடியேற்று விழா நடைபெறும். குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குபெறுவோர் அனுமதிக்கப்படுவர்.

ஒரு வார காலம் மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம். இதற்கென்று அரசாங்கம் பிரத்தியேக நிதி ஒதுக்குவது உண்டு. ஹைதராபாத் பப்ளிக் கார்டனில் நடத்தும் கொண்டாட்டத்தில் இதுவரை சாதித்த முன்னேற்றங்கள், நலத் திட்டங்களை அமல்படுத்தும் முறைகள் போன்றவை குறித்து ஆண்டுதோறும் மாநில அவதார தினத்தில் முதல்வர் மக்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம். ஆனால் கொரோனா பரவலால் கொண்டாட்டங்களை ஆடம்பரமின்றி நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

telangana day2
telangana day2

ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒரு பொதுநல திட்டத்தை அரசு அறிவிப்பது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநில நிதி நிலை குறைந்ததால் இந்த முறை எந்த புது திட்டமும் அறிவிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலைமை எப்படி இருந்த போதிலும் தனி மாநிலம் பெற நடத்திய போராட்டங்களை நினைவுகூர்ந்து மக்கள் கர்வத்தோடு மாநில உதய தினத்தன்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர். பிரதமர் நரேந்திரமோடி தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

தெலங்கானா உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதேபோல், தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜனும் தமது வாழ்த்துகளை மாநில மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

Topics

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Entertainment News

Popular Categories