புது தில்லி: தில்லியில் பாலியல் குற்றவாளி தினேஷ் சிங்கிடம் திகார் சிறையில் பிபிசி தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்த பெண் லெஸ்லி உட்வின் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவர் லண்டனுக்கு யாருக்கும் தெரிவிக்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. தில்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கிடம் எடுக்கப்பட்ட பேட்டி விவரங்கள், இந்த வார துவக்கத்தில், ஊடகங்களில் வெளியாகின. இதை அடுத்து .இந்த விவகாரம், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘டிவி’க்களில், இது குறித்து, காரசாரமாக பதிலளித்த, சிறைக்குள் சென்று பேட்டி எடுத்த பெண் நிருபர் லெஸ்லி உட்வின், தன் செயலை நியாயப்படுத்தினார். இந்நிலையில், இந்தியாவில், பி.பி.சி., ‘டிவி’யில் அந்தப் பேட்டி அடங்கிய, ஆவணப் படத்தை ஒளிபரப்ப மாட்டோம் என, உறுதியளித்த, பி.பி.சி., நிறுவனம், பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் ஒளிபரப்பி விட்டது. அந்தக் காட்சிகள், இணையதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கானோர் அதை, பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, பேட்டி எடுப்பதற்காக தவறான தகவல்களைக் கூறிய, உண்மை நோக்கத்தை மறைத்த, பேட்டி எடுத்த பெண் லெஸ்லி உட்வின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இந்நிலையில்,கடந்த பல நாட்களாக தில்லியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவில் தகவல் எதுவும் தெரிவிக்காமல் லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார்.
Popular Categories




