தாய் நினைவு தப்பிய நிலையில்… தம்பி விடாமல் அழுகை… சிறுமி என்ன செய்தாள் தெரியுமா?

police helping - 2026

அந்தச் சிறுமிக்கு சரியாக பேசக்கூட வரவில்லை. இரண்டரை வயது இருக்கும். அதனாலென்ன…?, தன் தாயையும் தம்பியையும் காப்பாற்றினாள்.

என்னதான் நடந்தது? அந்த சிறுமியின் தாய் ஒரு ரயில்வே பாலத்தின் மீது மயக்கமடைந்து கிடந்தார். தாய்ப்பால் குடிக்கும் சின்னஞ்சிறுவன் அம்மா எழுந்திருக்காததால் விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.

இந்தச் சூழ்நிலையில் இரண்டரை வயது உள்ள சிறுமி என்ன செய்திருப்பாள? என்ன செய்வது என்று தெரியாமல் அவளும் அழ ஆரம்பித்து இருப்பாள்.

ஆனால் இந்தச் சிறுமி அவ்வாறு செய்யவில்லை. சூழ்நிலையை புரிந்து கொண்டாள். ரயில்வே போலீசாருக்கு விவரம் தெரிவித்தாள். தன்னவர்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டாள். ஆச்சரியமமாக உள்ளதல்லவா?

இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மொராதாபாதில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. அம்மா நினைவில்லாமல் மயக்கம் போட்டு விழுந்து கிடக்கிறாள். எத்தனை எழுப்பினாலும் அவள் எழுந்திருக்கவில்லை. தம்பியோ விடாமல் விக்கி விக்கி அழுகிறான்.

அதைப் பார்த்த அந்தச் சிறு பெண் தன் குட்டிப் பாதங்களை எடுத்து வைத்து வேகமாக ஸ்டேஷனில் இருந்து இறங்கிச் சென்று யாராவது உதவிக்கு இருக்கிறார்களா என்று பார்த்தாள். அவளுக்கு என்ன செய்வது… யாரிடம் என்ன பேசுவது என்று ஒரே குழப்பம்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

ரயில்வே பெண் போலீசார் அங்கு தென்பட்டதால் அவரிடம் வேகமாகச் சென்றாள். ஏதோ சொல்ல வேண்டும் என்று அந்த சிறுமி முயற்சிப்பதும் கையை ரயில்வே பிளாட்பாரம் பக்கம் திருப்பி காட்டுவதுமாக இருந்த அந்தச் சிறுமி ஏதோ ஆபத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்த அந்த பெண் கான்ஸ்டபிள் சிறுமியிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.

சரியாக பேச்சு கூட வராத அந்தச் சிறுமி தன் மழலை மொழியில் ஏதோ சொல்கிறாள். அந்தப் பெண் போலீஸ் கான்ஸ்டபிளை கையை பிடித்து இழுத்துக்கொண்டு தன் தாயிடம் செல்கிறாள். அங்கு ஒரு பெண் கீழே கிடந்ததை பார்த்த உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸார்.

தாயிடமும் தம்பியிடமும் போலீசாரை வரவழைத்த பின் தன் தாய்க்கு எந்த ஆபத்தும் இல்லை… இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்… என்று அந்தச் சிறுமியின் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது. தற்போது அந்த சிறுமியின் தாயும் தம்பியும் உடல்நிலை தேறி வருகிறார்கள்.

ஆனால் இன்னும் அந்த தாய்க்கு மயக்கம் தெளியாததால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ன நடந்தது எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை அதிகாரிகள் கண்டு பிடிக்க முடியாமல் ஆராய்ந்து வருகிறார்கள்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

இந்தக் காட்சி போலீசாரின் உள்ளங்களைக் கரைய வைத்தது. அந்தச் சிறுமியை மனதாரப் பாராட்டினார். நம் உள்ளங்களையும் கரைய வைக்கும் அந்த சிறுமிக்கு நாமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிப்போம். அவள் எண்ணம் போல் அவள் தாயும் தம்பியும் நலமாக விடு திரும்பட்டும்!

குழந்தைகளை தைரியமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு சிறு வயதலேயே பெற்றோர் பெயர் ஊர் பெயர் போன் நம்பர் போன்றவற்றை சொல்லித்தர வேண்டும் என்றெல்லாம் சொல்வது இது போன்ற ஆபத்து சமயத்தில் கலங்காமல் துணிவோடு செயல்படுவதற்காகத் தான்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories