REPCO வங்கியில் பணி: ஊதியம் ரூ 100000!

Published:

REPCO - 2026

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Internal Ombudsman பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மாதம் ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம் (REPCO)

பணி : Internal Ombudsman

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் இணை பொது மேலாளர் பதவிக்கு இணையான அல்லது அதற்கு மேல் உள்ள பதவிகளில் தற்போது பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரி ஆக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.

மேலும், குறைந்தது 7 ஆண்டுகள் வரையில் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

ஊதியம் : வருடத்திற்கு ரூ.1,00,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Deputy General Manager (HR)

Repco Home Finance Limited

Corporate Office

3rd Floor, Alexander Square

New No. 2, Sardar Patel Road,

Guindy, Chennai – 600 032.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Retainer அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.repcohome.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related articles

Recent articles

spot_img