திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது, ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் பிரச்னை வெடித்தது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டு களேபரம் நிகழ்ந்தது அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள சட்டசமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை கேரள நிதி அமைச்சர் கே.எம்.மாணி தாக்கல் செய்தார். அப்போது எதிர்க் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கே.சிவதாசன் நாயரை கடித்துவிட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. நான் முதல்வர் உம்மன் சாண்டியை பாதுகாக்க அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, ஜமீலா திடீர் என என்னைக் கடித்துவிட்டார் என்று சிவதாசன் நாயர் தெரிவித்தார். ஆனால், இந்தச் சம்பவம் பற்றி ஜமீலா தெரிவித்தபோது, எம்.எல்.ஏ. தனது ஒரு கையால் பின்னால் இருந்து என் கையை முறுக்கினார். மறு கையை என் இடுப்பில் வைத்தார். பின்னர், என் பின்னால் இருந்தபடி, முழங்காலால் என்னை நிமிட்டித் தள்ளினார். யார் என்று தெரியாமல் நானும் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தேன். அங்கே சிவதாசன் நாயர் இருந்தார். நான், அவரிடம் என்னை விட்டுவிடுங்கள் இல்லை என்றால் கடித்து விடுவேன் என்றேன். முடிந்தால் கடித்துப் பாருங்கள் என்றார் அவர். அதனால்தான் கடித்தேன். நான் முதல்வரை தொடக்கூட இல்லை என்றார். இந்நிலையில், சட்டப்பேரவையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பேரவைத் தலைவரிடம் ஜமீலா புகார் அளித்துள்ளார். https://www.youtube.com/watch?v=UZJzKCnTO-g
என் இடுப்பில் கை வைத்தார்- கடித்தேன்: காங்கிரஸ் உறுப்பினரைக் கடித்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்
Popular Categories