மேடையிலேயே மரித்த மகா கலைஞர்; கலாமண்டலம் கீதநந்தன் ஆசானின் அதிர்ச்சிகரமான முடிவு!

ஓட்டந்துள்ளல் கலைஞர் கலாமண்டலம் கீதநந்தன் ஆசான், ஜன.28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கேரளத்தில் உள்ள அவிட்டத்தூர் மகாவிஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்து உயிரிழந்தார்.

5 ஆயிரத்துக்கும் அதிகமான மேடைகளில் நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் சென்று நடத்தியிருக்கிறார் 58 வயதாகும் கீதநந்தன். கேரளத்தின் புகழ்பெற்ற ஓட்டந்துள்ளல் கலையினை பலருக்கும் கற்றுக் கொடுத்து வந்தார். திரிசூர் இரிஞ்ஜாலக்குடாவில் மேடையில் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கிச் சரிந்தார். அவரை உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

மலையாளத்தில் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். கமலதளம் படத்தின் மூலம், தனது கலைத் துறையை வைத்து சினி உலகுக்கு அறிமுகமானவர். பின்னாளில் தூவல் கொட்டாரம், மனசினக்காரே, நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக, இரட்டக் குட்டிகளுடே அச்சன் என பல்வேறு படங்களில் முத்திரை பதித்தவர்.

பாலக்காட்டைச் சேர்ந்தவர். கேரளத்தின் செருத்துருத்தியில் வசித்து வந்தார்.
மனைவி ஷோபனா, மற்றும் சனல்குமார், ஸ்ரீலக்ஷ்மி என வாரிசுகளுடன் வாழ்ந்துவந்தார். அவர்களும் துள்ளல் கலைஞர்களாகத் திகழ்கின்றனர்.

துள்ளல் கலையை பிரபலப்படுதியவர் கீதநந்தன். இன்று கேரளத்தின் மாணவர்கள் பலரும் துள்ளல் கலையை பெரு விருப்புடன் கற்கின்றனர் என்றால் அதற்குக் காரணமாக விளங்கியவர் இவரே. பின்னாளில் துள்ளல் கலையைக் கற்றுக் கொடுக்க கலாமண்டலத்தில் அமைக்கப் பட்ட அமைப்பின் துறைத் தலைவராக இருந்து பயிற்றுவித்தார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

மேடைகள் பல கண்டவர். 1984ல் பிரான்ஸின் பாரீஸ் நகரில் மிகப் பெரும் அளவில் நிகழ்ச்சியை நடத்தியவர். வீரச்ருங்கால, துள்ளல் கலாநிதி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். துள்ளல் கலையுடன் இசை சேர்ந்து அளிக்கும் துள்ளல்பாத கச்சேரி என்ற நவீன கலையின் முதல் கலைஞராகத் திகழ்ந்தவர்.

1974ல் கலாமண்டலத்தில் துள்ளல் கலைத் துறையின் மாணவராகச் சேர்ந்தார். மிகவும் ஏழ்மையான, கௌரவமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தையாரால் கலாமண்டத்தில் கட்டணத்தைச் செலுத்த இயலாத நேரத்தில் மெட்ரோமேன் எனப் புகழப் படும் ஈ.ஸ்ரீதரன் கட்டணம் அளித்து அவருக்கு ஊக்கமளித்தார். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார் கீதநந்தன்.

இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினரயி விஜயன், கலாசாரத் துறை அமைச்சர் ஏகே பாலன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories