பி.எஸ்.எப் நடத்திய சோதனையில் பிடிபட்ட ரூ.6.15 கோடி கடத்தல் தங்கம் ..

எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ரூ.6.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

வடக்கு 24 பர்கானாஸ், வங்காளதேச எல்லையையொட்டிய பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பி.எஸ்.எப். தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தல் தங்கம் வருகிறது என்ற அடிப்படையில் எல்லை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ஐ.சி.பி. பெட்ராபோல் பகுதியில் வந்த லாரியை மடக்கினர். அதில் ஓட்டுனரின் இருக்கைக்கு பின்னால், கருப்பு துணியால் மூடியிருந்த பெரிய பொட்டலம் ஒன்றில் 70 தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. 3 தங்க கட்டிகளும் இருந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 98 லட்சத்து 54 ஆயிரத்து 165 ஆகும்.

இதனை தொடர்ந்து அனைத்து தங்க பிஸ்கெட்டுகள், தங்க கட்டிகள் மற்றும் லாரியை படையினர் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுனரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த ஓட்டுனர் ராஜ் மண்டல் (26). பங்காவன் நகரின் ஜாய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலில் இந்தியரான சகாபுதீன் மண்டல் என்பவருக்கு மறைமுக தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

வழக்கம்போல் ஜெயந்திப்பூர் சோதனை சாவடி பகுதியில் படையினர் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த நபரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், 466.62 கிராம் எடை கொண்ட 4 தங்க பிஸ்கெட்டுகளை படையினர் கைப்பற்றினர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அந்த நபர் மரூப் மண்டல் (36) என தெரிய வந்துள்ளது. இந்தியரான அவர் எல்லைக்கு அந்த பக்கம் வசித்து வந்துள்ளார். வங்காளதேசத்தின் ஜெஸ்சூர் மாவட்டத்தில் உள்ள பப்லு மண்டல் என்பவரிடம் இருந்து தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி கொண்டு வந்துள்ளார். அதனை ஹபீசுல் ஷேக் என்பவரிடம் ஒப்படைக்க இருந்த நிலையில், பி.எஸ்.எப். வீரர்கள், சோதனையில் தடுத்து நிறுத்தி அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளுடன், பெட்ராபோல் சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.15 கோடி என சங்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

704749 sfagt 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories