பி.எஸ்.எப் நடத்திய சோதனையில் பிடிபட்ட ரூ.6.15 கோடி கடத்தல் தங்கம் ..

எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ரூ.6.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

வடக்கு 24 பர்கானாஸ், வங்காளதேச எல்லையையொட்டிய பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பி.எஸ்.எப். தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தல் தங்கம் வருகிறது என்ற அடிப்படையில் எல்லை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ஐ.சி.பி. பெட்ராபோல் பகுதியில் வந்த லாரியை மடக்கினர். அதில் ஓட்டுனரின் இருக்கைக்கு பின்னால், கருப்பு துணியால் மூடியிருந்த பெரிய பொட்டலம் ஒன்றில் 70 தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. 3 தங்க கட்டிகளும் இருந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 98 லட்சத்து 54 ஆயிரத்து 165 ஆகும்.

இதனை தொடர்ந்து அனைத்து தங்க பிஸ்கெட்டுகள், தங்க கட்டிகள் மற்றும் லாரியை படையினர் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுனரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த ஓட்டுனர் ராஜ் மண்டல் (26). பங்காவன் நகரின் ஜாய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலில் இந்தியரான சகாபுதீன் மண்டல் என்பவருக்கு மறைமுக தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

வழக்கம்போல் ஜெயந்திப்பூர் சோதனை சாவடி பகுதியில் படையினர் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த நபரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், 466.62 கிராம் எடை கொண்ட 4 தங்க பிஸ்கெட்டுகளை படையினர் கைப்பற்றினர்.

அந்த நபர் மரூப் மண்டல் (36) என தெரிய வந்துள்ளது. இந்தியரான அவர் எல்லைக்கு அந்த பக்கம் வசித்து வந்துள்ளார். வங்காளதேசத்தின் ஜெஸ்சூர் மாவட்டத்தில் உள்ள பப்லு மண்டல் என்பவரிடம் இருந்து தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி கொண்டு வந்துள்ளார். அதனை ஹபீசுல் ஷேக் என்பவரிடம் ஒப்படைக்க இருந்த நிலையில், பி.எஸ்.எப். வீரர்கள், சோதனையில் தடுத்து நிறுத்தி அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளுடன், பெட்ராபோல் சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.15 கோடி என சங்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

704749 sfagt 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories