
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ‘சந்திரயான்- 3’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவின் மதிப்பு மிக்க சந்திரயான் 3 ராக்கெட்டை இன்று பிற்பகல் 2.35 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பப் பட்ட சந்திரயான்-3 தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
சந்திரயான் 3 வெற்றிகரமாக LVM3-M4 ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டது. ஏவுகணையில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்க, செயற்கைக்கோள் இப்போது அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.