சந்திரயான் 3 வெற்றிகரமான ஏவுதலின் பின்னே… தமிழர் வீர முத்துவேல்!

veera muthuvel isro project director - 2026

டாக்டர் வீர முத்துவேல், சந்திரயான்-3 திட்ட இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

சந்திரயான்-3′ சந்திரனுக்கு ஜூலை 14ஆம் தேதி (இன்று) ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட் மூலம் பிற்பகல் 2.35 மணிக்கு ஏவப்பட்டது. பேலோடில் பிரக்யான் ரோவருடன் விக்ரம்- மூன்லேண்டர் உள்ளது. சென்னையில் வசிப்பவர்கள் இந்த ராக்கெட் ஏவுதலைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.

ஜிஎஸ்எல்வி என்பது இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ஏவுகணை. சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14, 2023 இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-3ன் வளர்ச்சியில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் பி.வீர முத்துவேல் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில், சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் இவர்.

சந்திரயான்- 3-க்குப் பின்னால் உள்ள தமிழ் ‘மாஸ்டர் மைண்ட்’ பற்றிய சில சுவாரஸ்யங்கள்…

விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்து வந்தார். பின்னர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். ஆனால் விண்வெளியில் அவருக்கு இருந்த ஆர்வமும், அந்தத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரை அந்த வேலையில் பிடித்துத் தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பொறியியல் படிப்பை முடிப்பதற்காக தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்த அவர், மேல் படிப்புக்காக சென்னை ஐஐடியில் சேர்ந்து விண்வெளி துறையில் முக்கிய ஆராய்ச்சி செய்தார்.

சிக்கலான ஹார்டுவேர் வேலைகளில் அதிக ஆர்வம் கொண்ட வீர முத்துவேல், 1989ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் இஸ்ரோவில் சேர்ந்த முத்துவேல், நாடு, வெளிநாடு என பல நிறுவனங்களில் இருந்து வந்த வாய்ப்புகளை திரும்பிப் பார்க்காமல், இஸ்ரோவில் பணியாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டார்.

2016 ஆம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வு கட்டுப்பாட்டு அமைப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் அது தொடர்பான பரிசோதனைகள் பெங்களூருவில் உள்ள யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடத்தப்பட்டது. அவரது ஆய்வு விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்க உதவுவதோடு விண்கலத்தின் ரோவர் பகுதியை இயக்கவும் உதவும்.

இந்த ஆய்வுக் கட்டுரையைப் பார்த்து வியந்த இஸ்ரோ அவரைப் பாராட்டு மழையில் மூழ்கடித்தது. சந்திரயான் 3 திட்ட இயக்குநராக அதுதான் வாய்ப்பும் கொடுத்தது.

30 ஆண்டுகள் பல திட்டங்கள் மற்றும் இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு, விஞ்ஞானி வீர முத்துவேல், 2019 ஆம் ஆண்டில் விஞ்ஞானி கவிதாவுக்குப் பதிலாக சந்திரயான் 3 ன் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இன்று சந்திரயான் 3 வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பேசியது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories