மின்மயமாக்கல் முடிந்த பாரம்பரிய கொல்லம் – செங்கோட்டை ரயில் வழித் தடம்! புதிய ரயில்களுக்கு பயணிகள் எதிர்பார்ப்பு!

Published:

sengottai thenmalai railway line electrification - 2026
#image_title

புகழ்பெற்ற ரயில் வழித்தடத்தில் ஒன்றான‌ கொல்லம்-செங்கோட்டை-ராஜபாளையம் -மதுரை-சென்னை இடையே இனி விரைவில் ‘மின்சார ரயில் சேவை முழுமையாக இயங்கும்.

செங்கோட்டை அருகே கேரளாவில் மலை வழி ரயில் பாதையின் இடமன்-தென்மலை பிரிவில் தென்கண்ணாறு பாலத்தில் கடைசியாக மின்கம்பம் நிறுவப்பட்டு இடமன்-பகவதிபுரம் பகுதியிலும் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து விரைவில் மின்சார ரயில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல வருட காத்திருப்புக்குப் பிறகு, திருவிதாங்கூரின் முதல் ரயில் பாதையும் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது. கொல்லத்தில் இருந்து புனலூர் மற்றும் செங்கோட்டை வரையிலான 761 கிமீ சென்னை வழித்தடத்தில் இனி மின்சார ரயில்கள் இயக்கப்படலாம். 119 ஆண்டு கால வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.

மின்மயமாக்கல் நிறைவு

முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள எடமன் – பகவதிபுரம் பிரிவு பணிகள் நிறைவடைந்த நிலையில் சென்னை சாலை முழுமையாக மின்மயமாக்கப்பட்டது. இப்போது இன்ஜினின் சோதனை ஓட்டம் மற்றும் முதன்மை மின் பொறியாளர் (PCEE) மண் ஆய்வு முடிந்ததும், மின்சார வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும்.

எடமன்-தென்மலை பிரிவில் தென்கண்ணாறு பாலத்தில் கடைசி தூண் நிறுவப்பட்ட நிலையில், தற்போது பாதையின் முக்கிய பணிகள் நிறைவடைந்தன. மேலும் வயரிங் ஏற்பாடு மற்றும் இறுதி ஆய்வும் முடிந்தது

.கொல்லத்தில் இருந்து புனலூர் வரையிலான 45 கி.மீ தூரத்திற்கு 2022-ல் மின்மயமாக்கப்பட்டது. புனலூர்-இடமன் எட்டு கி.மீ., பகவதிபுரம்-செங்கோட்டை ஆறு கி.மீ., பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. எடமன் – பகவதிபுரம் இடையேயான 34 கி.மீ., மின்மயமாக்கல் பல சவால்களுக்குப் பிறகு முடிக்கப்பட்டது. டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்தால், ஒன்றரை மாதங்கள் பணி தாமதமானது.

எடமன்-பகவதிபுரம் பிரிவில் மின்மயமாக்கல் முடிந்ததும் ரயில்வேயால் முழுமையாக மின்மயமாக்கல் பணி முடிக்கப்பட்டது. குன்றுகளும் ஆறுகள் மலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மின்மயமாக்குவது சவாலாக இருந்தது. சாலை வசதி இல்லாத வனப் பகுதிகளுக்குச் சென்று கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஆறு சுரங்கங்களில் அடைப்புக்குறிகளும், 16 பாலங்களில் 38 மின்கம்பங்களும் அமைக்கப்பட வேண்டும். பத்து டிகிரி வரையிலான மலைகள் மற்றும் வளைவுகளில் வேலை செய்ய டவர் காரைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. தெற்கு ரயில்வே வரம்பில் சில நிலப்பரப்புகள் இத்தகைய சிரமத்தை அளித்துள்ளன.

பயண நேரம் குறையும்

இந்த மாத இறுதியில் கொல்லம் சென்னை இடையே முழுமையான மின்சார ரயில் இயக்கவும் புதிய ரயில் இயக்கவும் பயண நேரத்தை குறைக்கவும் தென்னக ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் செங்கோட்டை – புனலூர் -கொல்லம்-எரணாகுளம் வழித்தடத்தில் கூடுதல் பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயில் இயக்கவும் எர்ணாகுளம் -தாம்பரம், மங்களூர் -ராமேஸ்வரம் இடையே இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் உள்ள அகல ரயில் பாதைகளிலேயே மிகவும் குறைவான வேகத்தில் (30 கி.மீ.) ரயில் இயக்கப்படுவதில் செங்கோட்டை – புனலூர் வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் அகல ரயில் பாதையில் கூடுதல் பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயில்களை இயக்குவதற்காக, ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பின் பொறியாளர்கள் அண்மையில் ஆய்வுசெய்தனர்.

தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கோயம்புத்தூர் – பாலக்காடு, செங்கோட்டை – புனலூர், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடங்கள் உள்ளன. கோயம்புத்தூர் – பாலக்காடு, நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், செங்கோட்டை – புனலூர் வழித்தடத்தில் சென்னை – கொல்லம், மதுரை – குருவாயூர், பாலக்காடு -திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் -வேளாங்கண்னி ஆகிய 4 ரயில்களே இயக்கப்படுகின்றன.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இயற்கை எழில் மிகுந்த பாரம்பரிய பாதை

தென்னிந்தியாவில் இயற்கை எழில் மிகுந்த மலை ரயில் பாதைகளில் செங்கோட்டை – புனலூர் ரயில் பாதை முக்கியமானதாகும். 49 கி.மீ. தொலைவுக்கு உள்ள இந்த ரயில் பாதையில் 6 குகைகள், 50-க்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன. இவ்வழியாகச் செல்லும்போது மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள் என கண்களுக்கு இனிமையான அழகான இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும். கழுத்துருட்டி 13 கண் பாலம் உட்பட சிறிய மற்றும் பெரிய அளவிலான 200 பாலங்கள் இவ்வழித்தடத்தில் உள்ளன.

1902-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த ரயில் பாதையில் முதலில் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அப்போது பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், 1904-ம் ஆண்டு பயணிகள் ரயில் இயக்குவதற்காக சோதனை செய்தபோது, பாதை அதிக வளைவுகள் கொண்டதாகவும், ஏற்ற இறக்கமாகவும் இருந்ததால் அதிக வேகத்தில் சென்றால் ரயிலை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் ரயிலின் முன்னும், பின்னும் இரு இன்ஜின்களை இணைத்து, 14 பெட்டிகளுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள் ரயிலை இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ரயிலின் பின்னால் உள்ள இன்ஜின் மேடான பகுதிகளில் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், தாழ்வான பகுதிகளில் செல்லும்போது வேகத்தை குறைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் 2 இன்ஜின்களுடன் சேர்த்து 14 பெட்டிகளுடன், 30 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக அகல ரயில் பாதை பணிகள் முடிந்து 2018-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்ட பின்னரும் பழைய முறைப்படியே 14 பெட்டிகளுடன் 30 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

22 பெட்டிகளுடன் சோதனை

இந்த வழித்தடத்தில் கூடுதல் பெட்டிகள் இணைத்து அதிவேக ரயில்கள் இயக்க வசதியாக பல இடங்களில் தண்டவாள வளைவுகள் நேர் செய்யப்பட்டு விட்டன. ஏற்ற, இறக்கமாக இருந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டு விட்டன. இவ்வழித்தடத்தில் பகவதிபுரம் – எடமன் இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிந்து உள்ளன.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இந்நிலையில் செங்கோட்டை – புனலூர் இடையே 22 பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு சார்பில் கடந்த மாதம் ஆய்வு செய்யப்பட்டது.

இதற்காக லக்னோவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இருந்து பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக எல்ஹஎச்பி பெட்டிகள் இணைத்து ஆய்வு முடிந்த நிலையில் ஐசிஎப் பெட்டிகள் 24 கொண்டு ஆய்வு பணிகள் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்குப் பின்பு செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில், அதிக வேகத்தில் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது.

புதிய ரயில்கள் எதிர்பார்ப்பு

மேலும் எர்ணாகுளம் -ராமேஸ்வரம் , மங்களூர் -ராமேஸ்வரம் கோட்டயம் -சென்னை இடையே இந்த வழித்தடத்தில் புதிய தினசரி ரயில்கள் இயக்கவும் கன்னியாகுமரி முதல் புனலூர் வரை இயங்கும் மெமு ரயிலை செங்கோட்டை வரையும், திருவனந்தபுரம் -புனலூர் மெமு ரயிலை செங்கோட்டை வழி திருநெல்வேலி வரை நீடித்தது இயக்கவும் ரயில்வே நிர்வாகம் பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழக கேரளா ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img