June 16, 2025, 11:49 AM
32 C
Chennai

மகளிர் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி!

indian women cricket beaten south africa in chennai

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையினான மகளிர் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 28 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன் சேர்த்து டிக்ளேர் செய்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 149 ரன் எடுத்தார்.

இதன் பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மரிஷேன் கப் 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அதில் தென்னாப்பிரிக்க அணி 373 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் வோல்வர்ட் மற்றும் ஷுன் லூஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினார். வோல்வர்ட் 122 ரன், ஷுன் லூஸ் 109 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதில் ஸ்நே ராணா 2 விக்கெட் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க அணி 36 ரன் முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 37 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா 24 ரன்களுடனும், சுபா சதீஷ் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து பத்து விக்கெட் எடுத்து, தனது அபார பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டிய ஸ்நே ராணாவுக்கு ஆட்ட நாயகர் விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories