மாணிக் சர்க்காரை புகழ்ந்து தள்ளிய பாஜக.,வின் ராம் மாதவ்! ஏன் தெரியுமா?

புதுதில்லி:

திரிபுராவின் நீண்டகால முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரை வாயாரப் புகழ்ந்துள்ளார் பாஜக.,வின் ராம் மாதவ். சென்ற மாதம் வரை, அவர் மாணிக் சர்க்கார் குறித்து இத்தகைய கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், மாணிக் சர்க்கார் தேர்தலில் தோற்று, அதன் பின் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து அறிந்து தான் அவர் மீதான தன் கருத்தோட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளாராம்.

திரிபுராவின் புதிய முதல்வராக பாஜக.,வின் பிப்லவ் குமார் தேவ் பொறுப்பேற்கிறார். முதல்வராகப் பொறுப்பேற்கும் விழாவுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பதற்காக, அழைப்பிதழை எடுத்துக் கொண்டு, மாணிக் சர்க்கார் இருப்பிடத்துக்கு சென்றுள்ளார் ராம் மாதவ். கருத்தோட்டங்களின் வேறுபாடுகளைக் கடந்து, முந்தைய முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரின் ஆசியுடன் அடுத்து தொடர இருக்கும் பிப்லவ் குமார் தேவ் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராம் மாதவ்.

மாணிக் சர்க்காரின் எளிமையையும், நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வராக அவர் வாழ்ந்தது குறித்தும் அவர் மீதான தன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய ராம் மாதவ், இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தேர்தலில் தோற்றவுடன், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையுடன், முதல்வர் இல்லத்தை காலி செய்துவிட்டு, எந்த வித நெருக்குதலும் இல்லாமல் வெளியேறிய அவரது பெருந்தன்மையை வியந்து பாராட்டியுள்ளார்.

“அவரது இயல்புக்கு ஏற்ப, முதல்வர் பதவியில் இருந்து விலகியதும், உடனே முதல்வர் இல்லத்தைக் காலி செய்துவிட்டு, கட்சியின் அலுவலகத்துக்கு குடி பெயர்ந்தார். மற்ற தலைவர்களிடம் இது போன்ற செயல்பாடுகளை நாம் காண முடியாது” என்று பதிவிட்டார் ராம் மாதவ்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள பிப்லப் குமார் தேவும், ராம் மாதவும் நேற்று சிபிஎம் கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கே மாணிக் சர்க்காரைக் கண்டு, அவரிடம் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழைக் கொடுத்து, தனிப்பட்ட முறையிலும் மாணிக் சர்க்காருக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறினர்.

இது குறித்து பிப்லப் குமார் தேபும் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories