மாணிக் சர்க்காரை புகழ்ந்து தள்ளிய பாஜக.,வின் ராம் மாதவ்! ஏன் தெரியுமா?

புதுதில்லி:

திரிபுராவின் நீண்டகால முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரை வாயாரப் புகழ்ந்துள்ளார் பாஜக.,வின் ராம் மாதவ். சென்ற மாதம் வரை, அவர் மாணிக் சர்க்கார் குறித்து இத்தகைய கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், மாணிக் சர்க்கார் தேர்தலில் தோற்று, அதன் பின் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து அறிந்து தான் அவர் மீதான தன் கருத்தோட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளாராம்.

திரிபுராவின் புதிய முதல்வராக பாஜக.,வின் பிப்லவ் குமார் தேவ் பொறுப்பேற்கிறார். முதல்வராகப் பொறுப்பேற்கும் விழாவுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பதற்காக, அழைப்பிதழை எடுத்துக் கொண்டு, மாணிக் சர்க்கார் இருப்பிடத்துக்கு சென்றுள்ளார் ராம் மாதவ். கருத்தோட்டங்களின் வேறுபாடுகளைக் கடந்து, முந்தைய முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரின் ஆசியுடன் அடுத்து தொடர இருக்கும் பிப்லவ் குமார் தேவ் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராம் மாதவ்.

மாணிக் சர்க்காரின் எளிமையையும், நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வராக அவர் வாழ்ந்தது குறித்தும் அவர் மீதான தன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய ராம் மாதவ், இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தேர்தலில் தோற்றவுடன், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையுடன், முதல்வர் இல்லத்தை காலி செய்துவிட்டு, எந்த வித நெருக்குதலும் இல்லாமல் வெளியேறிய அவரது பெருந்தன்மையை வியந்து பாராட்டியுள்ளார்.

“அவரது இயல்புக்கு ஏற்ப, முதல்வர் பதவியில் இருந்து விலகியதும், உடனே முதல்வர் இல்லத்தைக் காலி செய்துவிட்டு, கட்சியின் அலுவலகத்துக்கு குடி பெயர்ந்தார். மற்ற தலைவர்களிடம் இது போன்ற செயல்பாடுகளை நாம் காண முடியாது” என்று பதிவிட்டார் ராம் மாதவ்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள பிப்லப் குமார் தேவும், ராம் மாதவும் நேற்று சிபிஎம் கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கே மாணிக் சர்க்காரைக் கண்டு, அவரிடம் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழைக் கொடுத்து, தனிப்பட்ட முறையிலும் மாணிக் சர்க்காருக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறினர்.

இது குறித்து பிப்லப் குமார் தேபும் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories