தத்கால் ரயில் முன்பதிவுக்கு இனி இ-ஆதார் கட்டாயம்!

railway news - 2026
#image_title

தத்கால் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளுக்கு இனி இ ஆதார் கட்டாயமாகிறது. இதனை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூகத் தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். முன்னதாக போலிகளைக் கண்டறிந்து களை எடுக்கும் வேலையை ஐஆர்சிடிசி தளத்தில் துவங்கியுள்ளதாக தெரிவித்த நிர்வாகம் இரண்டரை கோடி போலி பயனர் ஐடிகளை நீக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து விடுவதாகவும், இடைத்தரகர்கள் அதிகளவில் டிக்கெட் முன்பதிவு செய்வதாகவும் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து, இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க ரயில்வே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தத்கால் முன்பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அவர் தனது சமூக தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள குறிப்பில், தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது என்று தெரிவித்துள்ளார். 

அதாவது, ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பது அவரது அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தப் புதிய நடவடிக்கை மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

இதன் மூலம், ஆதார் எண் இணைத்து வெரிபிகேஷன் – சரிபார்ப்பு செய்து வைத்திருக்கும்  பயனர் கணக்கில் இருந்து மட்டுமே தத்கால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் ஓடிபி என்ணை பதிவு செய்த பிறகே டிக்கெட் புக் செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. கவுன்ட்டர்களில் தத்கால் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் இந்தப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படக்கூடும். 

ஏற்கனவே ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் பயனர் கணக்குகளுக்கு ஆதார் எண் சரிபார்ப்பு நடைமுறை உள்ளது.  அதன் மூலம் டிக்கெட் பதிவு செய்யப்பட்டும்  வருகிறது.  எனினும் அது கட்டாயமாக்கப்படுவது தற்போது உண்மையான பயனர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் வசதியாக இருக்கக் கூடும்.  

சாதாரண டிக்கெட் முன்பதிவு என்பது, ரயில்களில் 60 நாட்களுக்கு முன்னதாகவே செய்ய முடியும். மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீதம் தத்கால் முன்பதிவுக்கு ஒதுக்கப்படுகிறது. ஏசி வகுப்பு தத்கால் டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கும், படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளுக்கான டிக்கெட் 11 மணிக்கு முன்பதிவு செய்ய முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories