பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பலிதான தினம்!

Published:

pandit deendayal upadyaya - 2026

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பலிதான தினம் இன்று!

இன்றைய பா.ஜ.க-வின் தாய் கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் முதல் பொது செயலாளர், தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என பன்முகங்கள் கொண்ட தீனதயாள் உபாத்தியாயா 1968 பிப்ரவரி, 11ல்
பீஹார் மாநிலத்தில் உள்ள மொகல்சாராய் ரயில் நிலையத்தில், கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் அவர் உடல் கிடந்தது. அப்போது அவருக்கு வயது 51.

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தார். உறவினர்களால் வளர்க்கப்பட்டார். பத்து வயதே ஆன இவர் தன்னைவிட இரண்டு வயது குறைவான தம்பியை பொறுப்போடு வளர்த்து வந்தார்.

  • 1942-ல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் (RSS) இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார். ‘ஏகாத்மா மானவ்வாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது செயல்கள், படைப்புகள், பேச்சுகள் அனைத்திலும் தேசியமே நிறைந்திருந்தது. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் எப்போதுமே செயல்படுவார். வீடு, குடும்பம் இவற்றைவிட தேச சேவையையே முக்கியமாக கருதினார்.
  • தற்கால விஷயங்கள் குறித்து ‘பொலிடிகல் டைரி’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். 1951-ல் சியாம் பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டார்.
  • ‘இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம் பிரசாத் இவரைப் பற்றிக் கூறுவார். அவர் மறைந்த பின் ஜனசங்க கட்சியின் தலைவரானார்.
  • முதலாளித்துவமும்,கம்யூனிசமும் இல்லாமல் ஒருங்கிணைந்த மானிடவியலை வலியுறுத்தி ஏகாத்மமானவ சித்தாந்தத்தை (பாரதநாட்டின் தன்மையை) உலகிற்கு வழங்கிய மஹான்.
  • RSS ன் பிரச்சாரக்காக தனது வாழ்க்கையை முழுநேரமாக தேசப்பணிக்காக அர்ப்பணித்த உத்தமர்.
  • எளிமைக்கு இலக்கணமாக திகழந்தவர்
  • பாரதிய ஜனசங்கத்தின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நாடெங்கிலும் தேசிய சிந்தனை மேலோங்க சூறாவளி சுற்றுப்பயணங்கள் செய்தவர்.
  • 1967 களில் காங்கிரஸ் இல்லாத ஆட்சிகளை ஒன்பது மாநிலங்களில் ஏற்படுத்தியவர்.
  • ரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டு இன்றளவும் விசாரணை யின் முடிவு தெரியாமல் இருக்கும் நிலை.
  • தற்கால மத்திய அரசானது நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் கடையனையும் கடைத்தேற்று என்ற கொள்கைகளை கொண்டு அந்த்யோதய திட்டங்களை செயல்படுத்தி அவரது வகுத்த பாரதிய சித்தாந்தங்களின் அடிப்படையிலேயே செயலாற்றி வருகிறது.
ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

Related articles

Recent articles

spot_img