சேவா தீர்த்– புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்த மோடி!

seva theerth opened by pm modi - 2026

“சேவா தீர்த்” – புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
தில்லியில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் அடங்கிய “சேவா தீர்த்” கட்டடத்தை திறந்துவைத்து 4 கோப்புகளில் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி.

1) PM RAHAT திட்டம்: ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் காக்கும் பாதுகாப்பு
2) லட்சாதிபதி பெண்களின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல்
3) விவசாயிகளுக்கு முக்கிய ஊக்கம்: விவசாய உள்கட்டமைப்பு நிதி ₹2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டது.
4) ₹10,000 கோடி நிதி திரட்டலுடன் கூடிய ஸ்டார்ட்அப் இந்தியா நிதி 2.0: புதுமையின் அடுத்த அலை – என நான்கு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தில்லியில் புதிய பிரதமர் அலுவலகமான ‘சேவா தீர்த்’ ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் செயல்பட உள்ளது.

2014 ல் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்ற பிறகு, காலனித்துவத்துக்கு அடையாளமாக விளங்கும் சின்னங்களையும், மக்கள் மனதில் உள்ள அடிமைத்தன எண்ணங்களை மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி, மத்திய அமைச்சரவை செயலகமானது கர்தவ்ய பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜபாதை சீரமைக்கப்பட்டு கர்தவ்ய பாதை என பெயர் சூட்டப்பட்டது. ரேஸ் கோர்ஸ் சாலைக்கு லோக் கல்யாண் மார்க் எனவும், ஆளுநர் மாளிகைகள் லோக் பவன்கள் – மக்கள் மாளிகைகள் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1900ம் ஆண்டில் அவர்களது தலைமைச் செயலகம் டில்லி சவுத் பிளாக்கில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை பிரிட்டன் கட்டட கலைஞர் ஹெர்பெர்டி பாகர் வடிவமைத்தார். இந்தக் கட்டடத்தில் பிரதமர் அலுவலகம், ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்பட்டன.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்த அலுவலகங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘ சேவா தீர்த்’ என்ற புதிய இடத்துக்கு மாறின. தொடர்ந்து பிரதமர் அலுவலக புதிய கட்டடம் மற்றும் மத்திய செயலக கட்டடமான கர்தவ்ய பவன் 1 மற்றும் 2 ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கடந்த 1921 முதல் சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலி செய்யப்படுகின்றன. பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சமூகதளப் பதிவுகளில் குறிப்பிட்டதாவது…

இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியான உறுதியுடனும், ‘நாக்ரிக்தேவோ பவ’ (குடிமக்கள் சேவை) என்ற புனித உணர்வால் வழிநடத்தப்பட்டு, சேவா தீர்த்தம், பணிவுடன் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சேவா தீர்த்தம் எப்போதும் கடமை, இரக்கம், இந்தியா முதலில் என்ற கொள்கைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரகாசமான அடையாளமாக நிற்கட்டும். இது தலைமுறைகள் தன்னலமற்ற சேவையின் பாதையில் நடக்கவும், அனைவரின் நலனுக்காகவும் அயராத அர்ப்பணிப்புடன் நடக்கவும் ஊக்கமளிக்கட்டும்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இன்று முன்னதாக சேவா தீர்த்தத்தில், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், கடின உழைப்பாளி விவசாயிகள், இளைஞர் சக்தி மற்றும் பெண்கள் சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய கோப்புகளில் கையெழுத்திட்டனர். முக்கிய முடிவுகளில் பின்வருவன அடங்கும்:

விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை கிடைக்கும் வகையில் பிரதம மந்திரி ரஹத் திட்டத்தைத் தொடங்க ஒப்புதல் அளித்தல். பாதிக்கப்பட்ட எவருக்கும் உடனடி மருத்துவ உதவி வழங்கப்படுவதை இது உறுதி செய்யும்.

லக்பதி தீதி திட்டத்தின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல். இது பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதி இலக்கு ரூ. 1 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இது நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மற்றும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.

ரூ. 10,000 கோடி நிதி திரட்டலுடன் கூடிய ஸ்டார்ட்அப் இந்தியா நிதி 2.0-க்கு ஒப்புதல் அளித்தல். இது ஆரம்ப கட்டங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சியையும் ஊக்குவிக்கும்.

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

இந்த முடிவுகள் நாக்ரிக்தேவோ பவ (குடிமக்கள் சேவை) உணர்வை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன, மேலும் ஒரு விக்ஸித் பாரத்தை (வளர்ந்த இந்தியா) கட்டமைக்கும் நமது தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories