February 19, 2026, 11:57 PM
26.4 C
Chennai

முதல்வர் நாற்காலியை தக்கவைக்க உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து மண்டையை உடைத்துக் கொண்ட சித்தராமையா!

sidharamaiya in mysore chamundi temple - 2026

மைசூரு: முதல்வர் நாற்காலியை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, உடைந்த நாற்காலியில் அமர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டார்.

கர்நாடகத்தின் மிக முக்கியப் பகுதியான மைசூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் வீட்டில் உணவு அருந்த நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அதிலிருந்து கீழே விழுந்ததில், சித்தராமையாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

SID 1460941g - 2026

கர்நாடக மாநில சட்டசபைக்கு, வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற வெறியில் காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. சென்ற வாரம் மைசூரு பகுதியில் பாஜக., தலைவர் அமித்ஷா தீவிர பிரசாரம் செய்து வந்த நிலையில், காங்கிரஸுக்கு பலமான பகுதியான மைசூரு பகுதியில் இந்த வாரம் சித்தராமையா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

மைசூரு சித்தராமையாவுக்கு பலம் சேர்க்கும் பகுதி. அவர் போட்டியிட இங்குள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மாவினஹள்ளி பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைவரின் வீட்டில் விருந்து உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக அந்த இல்லத்துக்கு வந்த சித்தராமையா, ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது, நாற்காலியின் கால் வளைந்து சித்தராமையா சரிந்து கீழே விழுந்தார். பயங்கரமான சத்தம் கேட்டதால் ஓடி வந்து பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்நேரம் முன்னாள் எம்எல்ஏ சத்ய நாராயணா, அவரது நண்பர் எம் சித்தேகவுட ஆகியோர் உடன் இருந்தனராம். அனைவரும் இதைக் கண்டு கண்கலங்கி அழுதே விட்டனராம்.

பின்னர், தலையில் பட்ட காயத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சித்தராமையாவின் மகன் யதீந்திரா ஒரு மருத்துவர் என்பதால் உடனே சிகிச்சை கொடுத்து, லேசாக வெட்டுக் காயம் பட்டுள்ளது என்று கூறினார்.அவர் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெறப்பட்டுள்ளது.

பின்னர் அவர் மைசூருவில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். செவ்வாய்க்கிழமை இன்று தொடங்கி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் 5 நாள் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்கிறார் சித்தராமையா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories