January 25, 2025, 1:38 AM
24.9 C
Chennai

முதல்வர் நாற்காலியை தக்கவைக்க உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து மண்டையை உடைத்துக் கொண்ட சித்தராமையா!

மைசூரு: முதல்வர் நாற்காலியை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, உடைந்த நாற்காலியில் அமர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டார்.

கர்நாடகத்தின் மிக முக்கியப் பகுதியான மைசூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் வீட்டில் உணவு அருந்த நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அதிலிருந்து கீழே விழுந்ததில், சித்தராமையாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

கர்நாடக மாநில சட்டசபைக்கு, வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற வெறியில் காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. சென்ற வாரம் மைசூரு பகுதியில் பாஜக., தலைவர் அமித்ஷா தீவிர பிரசாரம் செய்து வந்த நிலையில், காங்கிரஸுக்கு பலமான பகுதியான மைசூரு பகுதியில் இந்த வாரம் சித்தராமையா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

ALSO READ:  சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

மைசூரு சித்தராமையாவுக்கு பலம் சேர்க்கும் பகுதி. அவர் போட்டியிட இங்குள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மாவினஹள்ளி பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைவரின் வீட்டில் விருந்து உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக அந்த இல்லத்துக்கு வந்த சித்தராமையா, ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது, நாற்காலியின் கால் வளைந்து சித்தராமையா சரிந்து கீழே விழுந்தார். பயங்கரமான சத்தம் கேட்டதால் ஓடி வந்து பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்நேரம் முன்னாள் எம்எல்ஏ சத்ய நாராயணா, அவரது நண்பர் எம் சித்தேகவுட ஆகியோர் உடன் இருந்தனராம். அனைவரும் இதைக் கண்டு கண்கலங்கி அழுதே விட்டனராம்.

பின்னர், தலையில் பட்ட காயத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சித்தராமையாவின் மகன் யதீந்திரா ஒரு மருத்துவர் என்பதால் உடனே சிகிச்சை கொடுத்து, லேசாக வெட்டுக் காயம் பட்டுள்ளது என்று கூறினார்.அவர் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெறப்பட்டுள்ளது.

பின்னர் அவர் மைசூருவில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். செவ்வாய்க்கிழமை இன்று தொடங்கி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் 5 நாள் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்கிறார் சித்தராமையா.

ALSO READ:  ஆதீன சொத்துகளை அபகரிக்க சதி; மடத்தின் பாரம்பரியத்தை இழிவுபடுத்த அறநிலையத்துறை எண்ணம்?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!