ஐபிஎல் 11 கோப்பை வெல்ல காரணமான வாட்ஸனுக்கு தோனி வெச்ச பேரு என்ன தெரியுமா?

சிஎஸ்கே கேப்டன் தோனி வெற்றிக் கோப்பையுடன் மகள் ஸீவா, மனைவி சாக்ஸியுடன் - படம்: தோனியின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில்
சிஎஸ்கே கேப்டன் தோனி வெற்றிக் கோப்பையுடன் மகள் ஸீவா, மனைவி சாக்ஸியுடன் – படம்: தோனியின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில்

ஐபிஎல் 11-வது சீஸனின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் அணியுடனான இறுதி ஆட்டத்தில் அதிரடி காட்டிய ஷேன் வாட்ஸனுக்கு “புதிய பெயர்” ஒன்றை செல்லப் பெயராக கேப்டன் தோனி வைத்துள்ளார்.

சூதாட்டப் பிரச்னைகள் காரணமான சர்ச்சைகளால், கடந்த 2 ஆண்டுகள் தடை முடிந்து தோனி தலைமையிலான சென்னை அணி, மீண்டும் களம் இறங்கியது. தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களான அஸ்வின், கார்த்திக் உள்ளிட்ட எந்த வீரர்களும் இல்லையாயினும், சென்னை அணிக்கு ரசிகர்கள் தோனி என்ற ஒரே காரணத்தாலேயே பெரும் எதிர்பார்ப்பையும் ஆதரவையும் அளித்து சிஎஸ்கே இந்த முறை பட்டம் வெல்லும் என அடித்துக் கூறினர்.

அவ்வாறே சென்னை அணியும் கடைசிக் கட்டம் வரை அதிரடி காட்டி லீக் ஆட்டங்களில் பட்டையைக் கிளப்பியது. ப்ளே ஆஃப் ஆட்டத்திலும் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

இந்த இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி, துவக்க வீரர் வாட்ஸனின் அபார சதத்தால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்த இறுதிப் போட்டியில் முதல் 10 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்த 41 பந்துகளில் சதம் அடித்து வெற்றி வீரராக ஜொலித்தார் வாட்ஸன். மிரட்டலான இவரது சதத்தால் வேறு எவரும் விளையாட களத்துக்கு இறங்க வேண்டிய தேவை இல்லாமல் போனது. சிக்ஸர் மழை பொழிந்து அசத்தலான ஆச்சரியமான அழகு ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேன் வாட்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஷேன் வாட்ஸனின் ஆட்டத்தை சென்னை அணி கேப்டன் தோனியும் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதற்கான தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கையில் வெற்றிக் கோப்பையையும், தனது மகள் ஸீவாவையும் வைத்துக்கொண்டு தோனி தனது மனைவி சாக்ஸியுடன் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வாட்ஸனுக்கு ஷாக்கிங் ஷேன் வாட்ஸன் என்று ஷாக் ஆனதாக ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்..

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

அவரது கருத்து: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. மும்பை இன்று மஞ்சள்நிறத்தில் மாறி எங்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி. ஷேன் ”ஷாக்கிங்” வாட்ஸன் அனைவருக்கும் இன்பஅதிர்ச்சி தரக்கூடிய இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார். இந்த சீசன் மிக இனிமையாக முடிந்தது..

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்ஸன், தோனி தனக்குச் சூட்டியுள்ள பெயரை ரசித்து வரவேற்றுள்ளார். அடுத்த நாள் மதியத்துக்குள் இந்தப் படம் 22 லட்சம் லைக்குகளைப் பெற்றது.

 

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories