திடீர் திடீர்னு திறந்த வண்டில கையை அசைச்சிட்டு போகாதீங்க… மோடிக்கு பாதுகாப்பு படையினர் ‘அறிவுரை’ !

modi in crowd - 2026

புது தில்லி: கொலைச் சதிகள் குறித்த தகவல்கள் வெளிவருவதால், மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. அத்துடன், மாவோயிஸ்டுகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய தகவல் வெளியானதன் எதிரொலியாக, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டு செல்வதையும் கை கொடுப்பதையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடிக்கு சிறப்பு பாதுகாப்புப் படையினர் அறிவுரையும் ஆலோசனையும் அளித்துள்ளனர்.

பிரதமர் மோடியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சதித்திட்டங்களை தீட்டியுள்ளதாக புனே போலீஸாரின் புலனாய்வு விசாரணையில் தகவல் தெரிவிக்கப் பட்டது. எனவே சாலை வழி பிரச்சார பயணங்களை பயன்படுத்தி, ராஜீவ்காந்தி கொலைசெய்யப் பட்டதைப் போல இதையும் நிகழ்த்த மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளனர் என்று, அவர்களின் இமெயில்.,களைத் திறந்து பார்த்தப் போது தெரியவந்தது.

இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த புனே போலீஸார், இந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மேலும், மத்திய உள்துறைக்கும் அளித்தனர். இது குறித்து மத்திய உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சிறப்பு பாதுகாப்புப் படையான எஸ்பிஜி படையினரும், சிபிஜி எனப்படும் பிரதமருக்கு மிக நெருக்கமாக இருந்து பாதுகாப்பு வழங்கும் அணியினரும் எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளனர். மேலும், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புப் படையில் சிஏடி எனப்படும் பதில் தாக்குதல் நடத்தும் குழுவினரும் எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பொதுவாக, பிரதமர் மோடி மக்களுடன் அதிக நெருக்கம் காட்டுவார். தான் செல்லும் இடங்களில் சாலையோரம் தன்னைக் காணவரும் பொதுமக்கள் குவிந்திருந்தால், காரில் இருந்து இறங்கிச் சென்று, அவர்களுடன் கை அசைத்து, கைகொடுத்து, பேசி மகிழ்வார். இப்படி, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களை சந்திப்பதை இனி தவிர்க்க வேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இனி, முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென பொதுமக்கள் மத்தியில் செல்வது, ரோட்ஷோ எனப்படும் சாலையோரம் கூடியுள்ள மக்கள் மத்தியில் முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென செல்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories