திடீர் திடீர்னு திறந்த வண்டில கையை அசைச்சிட்டு போகாதீங்க… மோடிக்கு பாதுகாப்பு படையினர் ‘அறிவுரை’ !

modi in crowd - 2026

புது தில்லி: கொலைச் சதிகள் குறித்த தகவல்கள் வெளிவருவதால், மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. அத்துடன், மாவோயிஸ்டுகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய தகவல் வெளியானதன் எதிரொலியாக, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டு செல்வதையும் கை கொடுப்பதையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடிக்கு சிறப்பு பாதுகாப்புப் படையினர் அறிவுரையும் ஆலோசனையும் அளித்துள்ளனர்.

பிரதமர் மோடியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சதித்திட்டங்களை தீட்டியுள்ளதாக புனே போலீஸாரின் புலனாய்வு விசாரணையில் தகவல் தெரிவிக்கப் பட்டது. எனவே சாலை வழி பிரச்சார பயணங்களை பயன்படுத்தி, ராஜீவ்காந்தி கொலைசெய்யப் பட்டதைப் போல இதையும் நிகழ்த்த மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளனர் என்று, அவர்களின் இமெயில்.,களைத் திறந்து பார்த்தப் போது தெரியவந்தது.

இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த புனே போலீஸார், இந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மேலும், மத்திய உள்துறைக்கும் அளித்தனர். இது குறித்து மத்திய உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சிறப்பு பாதுகாப்புப் படையான எஸ்பிஜி படையினரும், சிபிஜி எனப்படும் பிரதமருக்கு மிக நெருக்கமாக இருந்து பாதுகாப்பு வழங்கும் அணியினரும் எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளனர். மேலும், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புப் படையில் சிஏடி எனப்படும் பதில் தாக்குதல் நடத்தும் குழுவினரும் எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளனர்.

பொதுவாக, பிரதமர் மோடி மக்களுடன் அதிக நெருக்கம் காட்டுவார். தான் செல்லும் இடங்களில் சாலையோரம் தன்னைக் காணவரும் பொதுமக்கள் குவிந்திருந்தால், காரில் இருந்து இறங்கிச் சென்று, அவர்களுடன் கை அசைத்து, கைகொடுத்து, பேசி மகிழ்வார். இப்படி, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களை சந்திப்பதை இனி தவிர்க்க வேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இனி, முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென பொதுமக்கள் மத்தியில் செல்வது, ரோட்ஷோ எனப்படும் சாலையோரம் கூடியுள்ள மக்கள் மத்தியில் முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென செல்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories