மும்பை: பங்குச் சந்தை இன்று அபாரமாக உயர்வைச் சந்தித்தன. வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை தொடக்கம் முதலே உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் வரையிலும் உயர்வு கண்டது. கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு இரு பங்குச்சந்தைகளும் உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளி அன்று 27,011.31 என்ற புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று 27,537.85 புள்ளிகளாக அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 8,181.50 என்ற முந்தைய நிறைவுப் புள்ளியிலிருந்து 8,346.00 புள்ளிகளாக உயர்ந்தது.
பங்குச்சந்தை அபாரம்: சென்செக்ஸ் 500 புள்ளிகள், நிப்டி 150 புள்ளிகள் உயர்வு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari