December 5, 2025, 7:25 PM
26.7 C
Chennai

கேரள கன்யாஸ்த்ரி பலாத்கார விவகாரம்! பிஷப் ப்ரான்கோ அப்பாவி என்கிறது மிஷனரி!

Bishop Franco Mulakkal - 2025

திருவனந்தபுரம்: ஜலந்தர் மாநில ஆர்ச் பிஷப் கேரளாவில் இருந்தபோது அளித்த பாலியல் தொல்லையால் 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு சென்று விட்டனராம். இந்நிலையில், பிஷப் ப்ரான்கோ அப்பாவி, ஒன்றுமறியாதவர் என்று மிஷனரி கொடுத்த நற்சான்று, கேரளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பிஷப்பால் பாதிக்கப்பட்ட கன்யாஸ்த்ரிகள் 18 பேரும் போர்க்கொடி உயர்த்தி, போராட்டம் செய்தனர். இதற்கு, அவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாகவும் வெளிசக்திகள் தூண்டுதலால் அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் 18 பேர் மீதும் குற்றம் சாட்டியுள்ள மிஷனரிகள், பிஷப் பிராங்கோவுக்கு கைகொடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட ஆர்ச் பிஷப் பிராங்கோ மீது கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி பலாத்கார குற்றச்சாட்டை அளித்தார். இந்த பரபரப்பான புகாரை வைக்கம் காவல்துறை அதிகாரி சுபாஷ் விசாரித்து வருகிறார். இது குறித்து கன்னியாஸ்திரியின் உறவினர்களிடம் விசாரித்த போது பிராங்கோ தங்களையும் அவர் ஆதரவாளர்கள் மிரட்டியதாக தெரிவித்துள்ளனர்.

18nuns - 2025

இந்நிலையில், பாலியல் புகார் அளித்த கன்னியாஸ்திரி, “ஆர்ச் பிஷப் பிராங்கோ என்னை 2014 முதல் 2016 வரை 13 முறை பலாத்காரம் செய்துள்ளார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்து மன ரீதியாக சித்ரவதை செய்து என்னை பலாத்காரம் செய்தார். நான் இந்தப் பிரச்னையை சபைக்குள்ளேயே தீர்க்க விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. சபையைச் சேர்ந்தவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். ஆகவேதான் நான் காவல்துறையிடம் புகார் அளித்தேன்.

கேரள மாநிலம் கொச்சியில் சமீபத்தில் நடந்த பிஷப்புகள் மாநாட்டில் போப் ஆண்டவரின் பிரதிநிதி ஒருவர் கலந்துக் கொண்டார். இதே புகாரை அவரிடமும் நான் அளித்துள்ளேன். எனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் குடும்பத்துடன் காலடியில் வசித்து வருகின்றனர். பிஷப்புக்கு ஆதரவான ஒரு பாதிரியார் அவர்கள் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

என்னை மட்டும் அல்லாமல் மேலும் பல கன்னியாஸ்திரிகளையும் பிஷப் பிராங்கோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிராங்கோவின் பாலியல் கொடுமை தாங்க இயலாமல் இதுவரை 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டே ஓடி விட்டனர். அதனால் இதுவரை 5 மடங்கள் மூடப்பட்டுள்ளன… என்று கூறினார்.

கன்யாஸ்த்ரியின் இந்தக் கண்ணீர், கேரள மக்களிடம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஷப் பிராங்கோவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories