February 21, 2026, 11:41 AM
29.5 C
Chennai

கேரள கன்யாஸ்த்ரி பலாத்கார விவகாரம்! பிஷப் ப்ரான்கோ அப்பாவி என்கிறது மிஷனரி!

Bishop Franco Mulakkal - 2026

திருவனந்தபுரம்: ஜலந்தர் மாநில ஆர்ச் பிஷப் கேரளாவில் இருந்தபோது அளித்த பாலியல் தொல்லையால் 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு சென்று விட்டனராம். இந்நிலையில், பிஷப் ப்ரான்கோ அப்பாவி, ஒன்றுமறியாதவர் என்று மிஷனரி கொடுத்த நற்சான்று, கேரளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பிஷப்பால் பாதிக்கப்பட்ட கன்யாஸ்த்ரிகள் 18 பேரும் போர்க்கொடி உயர்த்தி, போராட்டம் செய்தனர். இதற்கு, அவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாகவும் வெளிசக்திகள் தூண்டுதலால் அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் 18 பேர் மீதும் குற்றம் சாட்டியுள்ள மிஷனரிகள், பிஷப் பிராங்கோவுக்கு கைகொடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட ஆர்ச் பிஷப் பிராங்கோ மீது கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி பலாத்கார குற்றச்சாட்டை அளித்தார். இந்த பரபரப்பான புகாரை வைக்கம் காவல்துறை அதிகாரி சுபாஷ் விசாரித்து வருகிறார். இது குறித்து கன்னியாஸ்திரியின் உறவினர்களிடம் விசாரித்த போது பிராங்கோ தங்களையும் அவர் ஆதரவாளர்கள் மிரட்டியதாக தெரிவித்துள்ளனர்.

18nuns - 2026

இந்நிலையில், பாலியல் புகார் அளித்த கன்னியாஸ்திரி, “ஆர்ச் பிஷப் பிராங்கோ என்னை 2014 முதல் 2016 வரை 13 முறை பலாத்காரம் செய்துள்ளார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்து மன ரீதியாக சித்ரவதை செய்து என்னை பலாத்காரம் செய்தார். நான் இந்தப் பிரச்னையை சபைக்குள்ளேயே தீர்க்க விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. சபையைச் சேர்ந்தவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். ஆகவேதான் நான் காவல்துறையிடம் புகார் அளித்தேன்.

கேரள மாநிலம் கொச்சியில் சமீபத்தில் நடந்த பிஷப்புகள் மாநாட்டில் போப் ஆண்டவரின் பிரதிநிதி ஒருவர் கலந்துக் கொண்டார். இதே புகாரை அவரிடமும் நான் அளித்துள்ளேன். எனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் குடும்பத்துடன் காலடியில் வசித்து வருகின்றனர். பிஷப்புக்கு ஆதரவான ஒரு பாதிரியார் அவர்கள் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

என்னை மட்டும் அல்லாமல் மேலும் பல கன்னியாஸ்திரிகளையும் பிஷப் பிராங்கோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிராங்கோவின் பாலியல் கொடுமை தாங்க இயலாமல் இதுவரை 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டே ஓடி விட்டனர். அதனால் இதுவரை 5 மடங்கள் மூடப்பட்டுள்ளன… என்று கூறினார்.

கன்யாஸ்த்ரியின் இந்தக் கண்ணீர், கேரள மக்களிடம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஷப் பிராங்கோவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories