கற்பழிப்பின் விலை ரூ.5 கோடி: இது கேரள பிஷப் பிரான்கோவின் டைரிக் குறிப்பு!

Bishop Franco Mulakkal 750 0 - 2026

கொச்சி: கன்யாஸ்த்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட பழி தீர, தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டால் ரூ 5 கோடி தருவதாக பிஷப் கூறுவதாக பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முல்லேகல் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். அவருடன் இந்த பிஷப்பால் பாதிக்கப் பட்ட சக கன்னியாஸ்திரிகளும் கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், அரசு விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தில்லி வாடிகன் தூதரக இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதினார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை பிஷப் பிராங்கோ மறுத்து செய்தி வெளியிட்டார். இருப்பினும் பிஷப் பிராங்கோவுக்கு ஆதரவாகவே சர்ச் நிர்வாகமும் மிஷனரிகளும் கருத்து வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.5 கோடி தருவதாக பிஷப் பிராங்கோ ஆசைகாட்டினார் என்று, பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

பிஷப் பிராங்கோ முல்லேகல் மற்றும் பாதிரியார்கள் இருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை அணுகி பிஷப் மீதான புகாரை வாபஸ் பெற்று கொள்ள வலியுறுத்தி, அதற்காக ரூ.5 கோடி தருவதாக வாக்களித்தனராம்.

இதனிடையே, கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப்புக்கு எதிராக அளித்த பாலியல் பலாத்கார புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்து, போலீஸாருக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் கொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வாட்டிகன் தூதரகத்துக்கும் கேரள கன்னியாஸ்திரி கடிதம் எழுதினர். ஆனாலும் பிஷப் பிராங்கோ தனது பண பலத்தை பயன்படுத்தி வழக்கிலிருந்து தன்னை பாதுகாத்து வருவதாகவும் இந்தியாவில் உள்ள மத குருமார்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நடுநிலைவாதிகள் என்று கூறிக் கொள்வோர், தவறு நடதால் தட்டிக் கேட்காமல் விடமாட்டோம் என நியாயவாதம் பேசுவோர் எல்லாம் கேரள வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப் பட்டார்கள் போலும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories