புது தில்லி: மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிப் பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி முதல் சுல்தான்பூர் இடையிலான 200 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 56-ஐ ரூ.4,400 கோடியில் நான்கு வழி நெடுஞ்சாலையாக மாற்றவும், மதுரை-ராமநாதபுரம் இடையிலான 115 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 49-ஐ ரூ.1,400 கோடியில் நான்கு வழிப்பாதையாக மாற்றவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் தென் பகுதிகளை மதுரையுடன் இணைக்கும் இந்த நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை.
மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிப்பாதைக்கு ஒப்புதல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari