புது தில்லி: இந்தியர்கள் அனைவரும் தமது தாய்மொழியுடன், மற்றொரு மாநில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபாவின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அப்போது அவர், மக்களை இணைப்பதில் மொழியின் பங்கு முக்கியமானது! ஹிந்தி பேசும் இளைஞர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் வளமான பண்பாட்டை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். புதிய வாய்ப்புகளையும் அவர்கள் பெற முடியும்!
#PresidentKovind inaugurates centenary celebrations of Dakshina Bharat Hindi Prachar Sabha in New Delhi; says every Indian should try to learn an Indian language other than his or her own pic.twitter.com/06oRsJr9lZ
— President of India (@rashtrapatibhvn) September 22, 2018