ஒடிஸாவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல்; இரண்டாவது விமான நிலையம் திறப்பு!

modi speech assam - 2026

ஒடிஸாவில் ரூ. 13 ஆயிரம் கோடி செலவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து இரண்டாவது விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்.

ஒடிசாவின் நிலக்கரி நகரம் என்றழைக்கப்படுகிறது தல்சேர். இந்திய உரக் கழகம் நடத்தி வந்த தல்சேர் உரத் தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் 2002ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதை புதுப்பிப்பது என 2011ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. கெயில், கோல் இந்தியா உள்ளிட்ட 4 அரசுத்துறை நிறுவனங்கள் இணைந்து, தல்சேர் உர நிறுவனத்தை உருவாக்கின.

இந்த தல்சேர் உரத் தொழிற்சாலையை ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவிலேயே நிலக்கரியில் இருந்து வாயு தயாரித்து அதை மூலப் பொருளாக பயன்படுத்தும் முதல் உரத் தொழிற்சாலையாக, தல்சேர் அமையும் என்றார்.

மேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி!

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

மேலும், முத்தலாக் தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டிய முக்கியமான முடிவை 3 நாட்களுக்கு முன்னர் அரசு எடுத்தது என்று குறிப்பிட்ட மோடி,  வாக்குகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் யாரும் முத்தலாக் குறித்து பேசுவதற்குக் கூட பயந்தனர் என்றார். மேலும்,  மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது, ஆனால் அதை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் தடைகளைச் செய்தார்கள். ஆனால் முத்தலாக் என்ற மோசமான நடைமுறையில் இருந்து முஸ்லிம் சகோதரிகளைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் மோடி.

இந்நிகழ்ச்சிக்குப் பின், ஜார்சுகுடா என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையத்தை தொடங்கி வைத்தார் மோடி. ஜர்ஜ்குடாவில் வீர் சுரேந்திரா சாய் விமான நிலையம் இரண்டாவது விமான நிலையமாக இன்று அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் மோடி!

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பிரதமர் ஜன் ஆரோக்யா’ என்ற சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நாளை(செப்.23) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பயனடையும் இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories