ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டம், பர்குந்தா ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது ஹவுரா-போபால் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 குழந்தைகள், 4 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று காலை இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
Popular Categories



