ஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி

infosys-narayanamoorthy.jpg

புது தில்லி:  பிரதமர் நரேந்திர மோடியின் ஒழுக்கம், ஜிஎஸ்டி போன்ற கொள்கை முடிவுகளில் உறுதியாக எடுத்து வளர்ச்சியை உறுதிப் படுத்தியது என சிலவற்றில் பிரதமர் மோடியைப் புகழ்ந்துள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவுனர் நாராயண மூர்த்தி. மேலும்,  அடுத்த ஆட்சிக்காலத்திலும் இந்த அரசுதொடர வேண்டும் என்று  தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள நாராயண மூர்த்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஊழல் இல்லை. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது…

மத்திய அரசு மட்டத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்களும் கடுமையாக உழைக்கின்றனர். மத்திய அரசு நிர்வாக மட்டத்தில் லஞ்ச புகார் குறித்து நான் அரிதாகவே கேள்விப்படுகிறேன். அவர் பிரதமராக தொடர்வது நாட்டுக்கு நல்லது. ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சில விஷயங்களை அமல்படுத்தும் போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் மோடியை குற்றம் சுமத்துவது சரியல்ல.

இவற்றுக்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த அரசு தொடர வேண்டும்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

கடந்த ஐந்து ஆண்டுகளைப் பார்க்கும் போது, நாட்டைப் பற்றி கவலைப்படும், கட்டுப்பாடு குறித்து கவலைப்படும், சுத்தம் குறித்து கவலைப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படும் ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இந்த அரசு தொடர்வது நல்ல விஷயமாகவே இருக்கும் என்று கூறினார்.

மேலும், ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்குமான பிரச்னைகள் குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த நாராயணமூர்த்தி, இரு தரப்பும் ஆர அமர பேசி சுமுகமான முடிவுக்கு வரவேண்டும். அனைத்து நிறுவனங்களும் பலமுடன் திகழ உறுதிப் படுத்த வேண்டும். நிறுவனங்களை பலவீனம் அடைய விடக்கூடாது. ஆனால், நேருவின் காலத்தில்தான் இது நடந்தது என்றார்.

நாராயண மூர்த்தியிடம், வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை அளித்த மோடி, பின்னர் சிலைகள் வைப்பதிலும் கோயில்களை புனரமைப்பதிலும் கவனம் செலுத்துகிறாரே என்று கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இவற்றை எல்லாம் தாம் ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்று கூறினார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

1 COMMENT

  1. டிமான்ஸ்டிரேஷன் ஏனோ நினைவில் வருகிறது.ஜி.எஸ்.டி மூலம் குறு தொழிற்சாலைகள் மறைந்தது அனைத்து க்கும் ரிலையன்ஸ் வெட்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories