ஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி

infosys-narayanamoorthy.jpg

புது தில்லி:  பிரதமர் நரேந்திர மோடியின் ஒழுக்கம், ஜிஎஸ்டி போன்ற கொள்கை முடிவுகளில் உறுதியாக எடுத்து வளர்ச்சியை உறுதிப் படுத்தியது என சிலவற்றில் பிரதமர் மோடியைப் புகழ்ந்துள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவுனர் நாராயண மூர்த்தி. மேலும்,  அடுத்த ஆட்சிக்காலத்திலும் இந்த அரசுதொடர வேண்டும் என்று  தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள நாராயண மூர்த்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஊழல் இல்லை. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது…

மத்திய அரசு மட்டத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்களும் கடுமையாக உழைக்கின்றனர். மத்திய அரசு நிர்வாக மட்டத்தில் லஞ்ச புகார் குறித்து நான் அரிதாகவே கேள்விப்படுகிறேன். அவர் பிரதமராக தொடர்வது நாட்டுக்கு நல்லது. ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சில விஷயங்களை அமல்படுத்தும் போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் மோடியை குற்றம் சுமத்துவது சரியல்ல.

இவற்றுக்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த அரசு தொடர வேண்டும்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

கடந்த ஐந்து ஆண்டுகளைப் பார்க்கும் போது, நாட்டைப் பற்றி கவலைப்படும், கட்டுப்பாடு குறித்து கவலைப்படும், சுத்தம் குறித்து கவலைப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படும் ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இந்த அரசு தொடர்வது நல்ல விஷயமாகவே இருக்கும் என்று கூறினார்.

மேலும், ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்குமான பிரச்னைகள் குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த நாராயணமூர்த்தி, இரு தரப்பும் ஆர அமர பேசி சுமுகமான முடிவுக்கு வரவேண்டும். அனைத்து நிறுவனங்களும் பலமுடன் திகழ உறுதிப் படுத்த வேண்டும். நிறுவனங்களை பலவீனம் அடைய விடக்கூடாது. ஆனால், நேருவின் காலத்தில்தான் இது நடந்தது என்றார்.

நாராயண மூர்த்தியிடம், வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை அளித்த மோடி, பின்னர் சிலைகள் வைப்பதிலும் கோயில்களை புனரமைப்பதிலும் கவனம் செலுத்துகிறாரே என்று கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இவற்றை எல்லாம் தாம் ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்று கூறினார்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

1 COMMENT

  1. டிமான்ஸ்டிரேஷன் ஏனோ நினைவில் வருகிறது.ஜி.எஸ்.டி மூலம் குறு தொழிற்சாலைகள் மறைந்தது அனைத்து க்கும் ரிலையன்ஸ் வெட்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories