ஐயப்ப பக்தர்கள் கிரிமினல்களா? எனில் மத்திய அமைச்சர்..?: நீதிமன்றத்தில் கேரள அரசு சொன்ன விளக்கத்தால் சர்ச்சை!

kerala high court - 2026

சபரிமலையில் கிரிமினல்கள்தான் பிரச்னையில் ஈடுபடுவதாகவும், போலீசார் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள விளக்கத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர், சபரிமலைக்கு சுற்றுலா செல்ல முயன்ற பெண் போராளிகளை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இது சுற்றுலா தலமல்ல என்று அந்தப் பெண்களைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தை தடுக்க இயலாத கேரள அரசு, காட்டுமிராண்டித் தனமாக, அவர்களின் வாகனங்களை அடித்து உதைத்து, பெரும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது போன்ற கலவரக் காட்சியைக் காட்ட முனைந்தது.

இதை அடுத்து அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. சாதாரணமாக சாலையில் நடந்து சென்ற பக்தர்களைக் கூட போலீசார் தடியால் அடித்து தாக்கினர். போலீஸாரின் கெடுபிடியால் சபரிமலைக்கு வரும் பக்தர்களீன் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பக்தர்கள் சரணகோஷம் போடக் கூடாது, 6 மணி நேரத்துக்கு மேல் சபரிமலை தேவஸ்தானத்தில் இருக்கக் கூடாது என்றெல்லாம் கடுமை காட்டிய போலீஸார், அதை மீறி அங்கே தங்கியவர்களைக் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். தொடர்ந்து கேரள உயர் நீதிமன்றம் இது குறித்த வழக்கை விசாரித்து வருகிறது. அப்போது, சபரிமலையில் 144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியது. அதற்கு விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், பக்தர்களிடம் அதிக கெடுபிடி காட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சபரிமலையில் கிரிமினல்கள் தான் பிரச்னை செய்தனர். போலீசார் அத்துமீறலில் ஈடுபடவில்லை. பிரச்னை செய்த கிரிமினல்கள்தான் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், வசதிக் குறைவு காரணமாகவே சபரிமலையில் இருந்து நிலக்கல்லுக்கு முகாம் மாற்றப்பட்டது என்றும், இந்த நடவடிக்கைக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளது.

கேரள அரசின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கிரிமினல்களா என்று கேரள அரசுக்கு பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். செங்கொடிக்கு ஜே போடுபவர்கள் அமைதியானவர்கள், ஆனால் சரணகோஷம் போடுபவர்கள் கிரிமினல்கள் என்ற வகையில் கேரள அரசு கூறியிருப்பதால், அதிருப்தி அடைந்துள்ள பலரும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories