ஆந்திரம், வங்கம், சட்டீஸ்கர்… எந்தத் தவறை மறைக்க சிபிஐ.,யை தடுக்கிறார்கள்?: ‘பொட்டில் அறைந்த’ மோடியின் கேள்வி!

modi bjp coucil - 2026

பாஜக., தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த இரு தினங்களாக தில்லியில் நடைபெற்று வந்தது. இந்த இரு நாள் விழாவில் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், காங்கிரஸ் ஊழல்வாதிகள் ஏன் சிபிஐ.,யை தங்கள் மாநிலத்தில் வர தடை விதித்துள்ளனர் என்பதை விளக்கமாகக் கூறினார்.

அவர் இது குறித்துக் கூறிய போது, “நான் குஜராத் முதல்வராக இருந்த போது, தங்கள் கைகளில் இருந்த ஒவ்வொரு துறைகளையும் கொண்டு தொடர்ந்து 12 ஆண்டுகள் என்னை வேட்டையாடினர். ஆனாலும் நான் குஜராத்தில் சி.பி.ஐ.க்கு தடை விதிக்கவில்லை.

ஆனால் எதிர்க்கட்சிகள் செய்வதை பாருங்கள். ஆந்திராவில், மேற்கு வங்கத்தில், சத்தீஸ்கரில்…! எந்தத் தவறை அவர்கள் மறைக்க விரும்புகிறார்கள்? – என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி!

மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, மோடிக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார். மேலும், மோடிக்கு எதிராக மெகா கூட்டணி உருவாக்கப் போவதாகவும் கூறி செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து, சிபிஐ., ஆந்திர மாநிலத்தில் தன்னிச்சையாக செயல்படவும் தடை விதித்தார். இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் சந்தேகங்கள் வலுத்தன. மத்திய அரசுடன் கூட்டணியில் பிணக்கு ஏற்படக் காரணமே, இருதரப்பும் முறைகேடு எதையோ மறைக்க முயற்சி செய்வதுதான்! தங்களது ஊழல்களை மத்திய அரசு தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்துவிடும் என்ற அச்சத்தால்தான், பேரம் படியாமல் நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறினார் என்று கூறினார்கள் அரசியல் நோக்கர்கள். அதனால்தான் சிபிஐ.,யைக் கண்டு பயம் கொண்டு, அதற்கு தடை விதித்தார் என்றார்கள்.

அதனை பிரதமர் மோடி சூசகமாக தனது பேச்சில் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் சட்டீஸ்கர் அரசும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கெனவே, சாரதா சிட்பண்ட் உள்ளிட்ட மெகா ஊழல்களால் அவப்பெயரைப் பெற்று வரும் மேற்கு வங்க மம்தா அரசும் இந்த அச்சத்தாலேயே சிபிஐ.,க்கு தன் மாநிலத்தில் தடை விதித்தார் என்று கூறப்படும் நிலையில், பிரதமர் மோடியின் கேள்வி அதனை உறுதிப் படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories