December 6, 2025, 6:45 AM
23.8 C
Chennai

மோடியின் தேதி காலாவதி ஆகிவிட்டது; மம்தா பானர்ஜி!

11 June23 Mamtha - 2025

மோடியின் தேதி காலாவதி ஆகிவிட்டது, இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்று, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தகவல் வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள தில்லி புறப்படும் முன் கோல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசினார் மம்தா பானர்ஜி!

அப்போது அவர், மீண்டும் ஆட்சிக்கு வரபோவதில்லை என மோடிக்கு தெரியும். அவரது காலாவதி தேதி முடிந்து விட்டது. இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். புதிய அரசை காண விரும்புகிறோம். நாடு மாற்றத்தை விரும்புகிறது. ஒன்றுபட்ட இந்தியாவையே நாடு விரும்புகிறது. அதுவே ஜனநாயகத்தை தொடர செய்யும் என்று கூறினார்.

அண்மையில், கோல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தின் விளைவால் அடிக்கடி எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. அதன் படி, இன்று தில்லியில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி தர்ணா போராட்டம் நடத்துகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் இல்லாமல் கோல்கத்தா போராட்டத்தை நடத்தி முடித்தார் மம்தா பானர்ஜி. காங்கிரஸை ஓரம் கட்டி, ராகுலை ஓரம் கட்டி, பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதுடன், மோடிக்கு சிறந்த எதிரியாக தானே இருப்பதாக காட்டிக் கொண்டு வருகிறார்.

அண்மையில் கோல்கத்தாவில் மம்தா நடத்திய பொதுக்கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அதுபோல் இந்த தர்ணா போராட்டத்திலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories